புதன், ஜூன் 27, 2012

காப்பி நேரம்


இன்று காலையில் கணவரிடம்  பேசிக்கொண்டிருந்த போது (காப்பி நேரம்)  முட்டாள்தனமான ஒரு விவரத்தை வீர செய்கை போல் என்னிடம் பகிர்ந்தார்.

நண்பரின் மகன் 13வயது, அவனுடைய நண்பர்களோடு சேர்ந்து சிகரெட் புகைக்கும் போது கையும் களவுமாக பிடித்து விலாசு விலாசென்று விலாசி விட்டாராம் நண்பர்... அந்த பையனை எனக்கு நன்கு தெரியும். நல்ல மரியாதையான பையன். தலைக்கு மேல் வளர்ந்த பையனை இப்படியா அடிப்பது.! (கூர்ர்ர்ர்....)

ஏன் இன்னமும் இப்படி செய்கிறார்கள் நம்மவர்கள்?

நானும் தான் என் மகன் அந்த வயதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் போது பார்த்துவிட்டேன். கையும் களவுமாகப்பிடித்து விட்டேன்.

என்ன சொன்னேன் தெரியுமா?

ஐயா, எல்லோருக்கும் இதுபோன்ற ஆசை வரும், அம்மா கூட உன் வயதில், பாட்டி வைத்திருந்த சுருட்டை புகைத்து சுவைத்தேன்.. இருமல் வந்தது.. பிறகு அதைத் தொடவே இல்லை.

எல்லாவற்றையும் பழகிப்பார்க்க ஆசை வரும், தப்பில்லை ஆனால் தொடராதே, உடல் நலக்கேடு. என்றேன். அவ்வளவுதான்.

இன்று கூட அவனின் நண்பர்களுக்கு அந்த பழக்கம் இருக்கின்றதாம் ஆனால் அவனுக்கு இல்லை. இப்போ பதினெட்டு வயது இளஞன் அவன்.

பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, அந்த வயதில் நாம் என்ன செய்தோமென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.!

இவனுங்க உலகத்தில் உல்ல அனைத்து அயோக்கியத்தனத்தையும் செய்வானுங்க.. பிள்ளைகள் அப்படியே பொம்மை மாதிரி வளரனுமாம்..
என்ன நியாயம்!

அடித்தால் இன்னும் மோசமாகும் நிலைமை. வெளியுலகம் சென்றுவிட்டால், சுய ஒழுக்கம்தான் பாதுகாப்பு. அதற்கு பெற்றோர்களின் பங்கு என்ன? நாம் சரியான வழிகாட்டியாக இருந்துள்ளோமா!?

வாய் விட்டு சிரித்தேன்

இன்று நான் படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்த ஒரு எழுத்துப் பதிவு.

``ஏன்ய்யா, உங்கள் எழுத்தாளர்களுக்குள் ஏன் இத்தனை அக்கப்போர். ’’