வியாழன், ஜனவரி 26, 2012

எனது வினா.?

வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம்
எழுதுகிறார்கள்
முத்திரை பதிக்க

ஒரு வரி
இரு வரி
பல வரிகள்

ஒரே ஒரு
வரியில் இருந்தால்
’குறிப்பு’
என்கிறார்கள்

சட்டை

நான் சட்டை
செய்யாதபோதும்
என்னைச் சதா
தழுவிக்கொண்டே இருக்கிறது
ஒர் உடல்
இரு கைகள்

மன வெ(வ)டிப்பு

கோடுகள்
நெளிந்து நெளிந்து
வட்டமாகி வடிவமாகி
அழகான
ஓவியமானது

அதைப்பார்க்கப் பார்க்க
பொங்கினான்
பதற்றமானான்
பரிதவித்தான்
பார்வையாளன்

அது வெறும்
ஓவியம் தான்
ஏன் கண்ணாடி போல்
என் பிம்பம் காட்டுகிறது!?

ஓவியனும்
திகைத்தான்
அது தன் உருவத்தை
இன்னும் கம்பீரமாக
காட்டிக்கொண்டிருந்தது.