புதன், செப்டம்பர் 25, 2013

மஹாலக்ஷ்மி


கோழி வியாபாரியுடன் சல்லாபித்து
மாடு அறுக்கும் ஆஹமாட் தொட்டு
பன்றி வியாபாரி ஆச்சோங்கிடம் சென்று
ஆட்டின் இரத்தத்தில் நனைந்து
மீன் உடலில் ஸ்பரிசரித்து
காய்கறிகளின் கழிவுகளில் உழன்று
கழிவறைவாசியின் கைக்குலுக்கி
விபச்சாரியிடம் வீசி எறியப்பட்டு
கொலை கொள்ளைக்காரனிடம் பதுங்கி
தில்லுமுல்லுவிலும் புகுந்து
பொய் பித்தலாட்டத்திற்கு உதவி
பல் இடுக்குகளில் சிக்கியதையும் நீக்கி
கழுவாதவனின் கைப்பட்டு
அவன் தொட்டு இவன் தொட்டு
கீழே பலமுறை விழுந்து
அங்கும் இங்கும் மிதிப்பட்ட
சாதாரண காகித நோட்டு..
ஆச்சாரம் பார்ப்பவன் வீட்டில்
மஹாலக்ஷ்மியாக பூஜையறையில்..