ஞாயிறு, மார்ச் 18, 2012

மடல்தான்

நீ அப்பாவியா இரு, ஆனால் உன்னைப்பற்றி தப்பாகப்பேசப்படுகிறதே, அதில் உனக்கு தெளிவு வேண்டாமா? எப்படி உன்னிடம் சொல்வது? அதை நான் உன்னிடம் சொல்கிற போது, அட இப்படி எதார்த்தமாக இருந்துவிட்டோமே, என்கிற குற்றவுணர்வு உனக்கு வரும், அதை எப்படி நான் ஜீரணிப்பது? அந்த முக பாவனையை நான் எப்படி எதிர்க்கொள்வது!? நீ எதார்த்தவாதியாகவே இரு, ஆனால் எதார்த்தத்தை போற்றத்தெரியாதவர்களை அடையாளங் கண்ட்டுக்கொள். அப்பாவியாக இருக்காதே. சுற்றியிருப்பவர்கள் சூழ்ச்சிக்காரர்கள். அதற்காக சூழ்ச்சிக்காரியாக மாறு என்று நான் சொல்ல மாட்டேன், வாழ்வதற்கு அதுவும் கொஞ்சம் தேவை என்கிறேன். துளி கூட சொரணை இல்லாமல் எப்படி வாழ்வது?