வியாழன், மார்ச் 20, 2014

அவசர எண்..

அலுவலகத்தில், அவசர அழைப்பு எண்களை அனைத்து floor யிலும் வைத்திருப்பார்கள். கீழே நான் அமர்கின்ற இடத்தின் பின்புறமும் அந்த லிஸ்ட் இருக்கும்.. சுவரில் ஒட்டி வைத்திருப்பார்கள்.

இன்று ஒரு பிரச்சனை. `எடு, பிடி, ஓடு, காவலாளிக்கிட்ட சொல்லு, கேட் மூடு, முன் பக்கம் சாத்து.. விடாதே, கார் நம்பர் நோட் பண்ணு, பிடி பிடி, போலிஸ் கூப்பிடு..’ என, தடதடவென இருவர் என் இடத்திற்கு ஓடி வந்தார்கள். 

நான் செய்வதறியாமல் `பே’ன்னு நின்று கொண்டு இருந்தேன்.
இங்கிருந்து அந்தப்பக்கம்.. அங்கிருந்து இந்தப்பக்கம்.. கீழே இருந்து மேலே.. மேலே உள்ளவர்கள் கீழே... ஓடு ஓடுன்னு ஓடி... ஒரே அமளி.

போலிஸ் கூப்பிடு.. போலிஸ் கூப்பிடு.. என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டான்.

போலிஸ் கூப்பிட்டு..?? என்னன்னு சொல்ல? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

மீண்டும் இன்னும் கூடுதல் ஐந்தாறு பேருடன் வந்து.. போலிஸ் கூப்பிட்டியா? என்றான்.

டேய் கஸ்மாலங்களா.. என்ன பிரச்சனைன்னு சொல்லாம, போலிஸ கூப்பிட்டு..!?

ஓடினான்.. கார்ட் ஹவுஸுக்கு.. மீண்டும் உள்ளே வந்தான்.. மூச்சு வாங்க..

என்ன நம்பரு? என்னா நம்பரு..? என் முன்னே நின்றுகொண்டு அவசரப்படுத்தினான்.. எனக்கு லேசா கிறுகிறுப்பு வந்துவிட்டது.

யார் நம்பர்.? பதில் சொல்லல...

அதற்குள் மனிதவள அதிகாரி கீழே இறங்கிவந்தார், இன்னும் சில அதிகாரிகளுடன், படபடப்பாய் இருந்த இந்த மெனெஜரை அழைத்துக்கொண்டு கீழே உள்ள ஒரு மீட்டிங் ரூம்’மிற்குள் நுழைந்தார்கள்.

கார்ட் வந்து சொன்னான்.. நீ கேட்’ஐ மூடு என்று சொல்வதற்கு முன்னமே, அந்த மஞ்சள் கார், சர்ர்ர் என்று சென்றுவிட்டது. விடு, இது நம் பிரச்சனை அல்ல. என்று சொல்லி விட்டுச் சென்றான்.

அவர்களுக்குள் என்ன பேச்சு நடந்ததென்று தெரியவில்லை. மீட்டிங் முடிந்து வெளியே வந்தவுடன்... போலிஸ் இன்னும் வரலயா.. ? கேட்டான்.

நான் கூப்பிடவே இல்லையே.. என்றேன்.
முறைத்தான்...

எங்கள் அதிகாரி, என்னிடம் வந்து, “எது நடந்தாலும், என்ன நடந்தாலும், என்னிடம் அனுமதி கேட்காமல், போலிஸுக்கு அழைக்கக்கூடாது..” என்றார்.

முருகா....