வெள்ளி, மார்ச் 23, 2012

ஆணாதிக்கம்

கொஞ்சம் சோகமான குட்டிக்கதை - யாரும் அழவேண்டாம்.

``ஹை பேபி, என்ன சமையல் இன்று?’’

``முட்டைக் குழம்பு வைத்தேன் மாமா.’’

``சாப்பாடு எடுத்து வை, மாமா குளித்து விட்டு வருகிறேன்.!’’

``சரி மாமா..’’

``ம்ம்ம்..சுவையோ சுவை. நல்லா சாப்பிட்டேன். என்ன மசாலா போட்டு சமைத்தாய் பேபி, மணம் தூக்கலாக இருக்கிறதே..?’’

``எல்லாம் தமிழ்நாட்டு மசாலாதான் மாமா’’.

``நானே நான்கு முட்டைகள் போட்டுச் சாப்பிட்டுவிட்டேன். உனக்கு இருக்கா?’’ அக்கறையோடு கேட்கிறார் மச்சான்.

``இருக்கு மாமா, பத்து முட்டைகள் போட்டுச் சமைத்தேன். இன்னும் இருக்கு, வேணுமா?’’ அப்பாவியாகச் சொல்கிறாள். தாய்மையுணர்வோடு.!

``என்ன!!!! ரெண்டு பேருக்கு பத்து முட்டைகளா? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இருக்கிறேயே? எதுக்கு இந்த அநாவசிய செலவு எல்லாம்? சிக்கனமா இருக்கத்தெரியாதா? ஐந்து முட்டைகள் போட்டுச் சமைத்தால் போதாதா? மீதம் ஐந்து முட்டைகளை வேறு நாள் பயன்படுத்தலாமே.! இப்படியா ஊதாரியா இருப்ப!?’’  சொல்லம்புகள் பாய்கின்றன, இதயத்தைத் துளைக்கின்றன. இதை அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

``மாமா, ஐந்து முட்டைகள் போட்டுச் சமைத்தால், நீங்க நான்கு முட்டைகள் சாப்பிட்டு விட்டீர்கள், அப்போ எனக்கு?? ’’ கலங்கிய நெஞ்சத்துடன் பேபி.

``உண்டிக்குறைத்தல், பெண்டிற்கழகு... உனக்கு ஒண்ணு போதும். அலையாதே.!’’ .

.டிங்..டிடின்..டிங்..டிடின் ..டிங்..தென்பாண்டிச்சீமையிலே தேரோடும் வீதியிலே, மான் போல வந்தவள, யார் அடிச்சாரோ, யார் அடிச்சாரோ?

எங்கே இருக்கு சம உரிமை? பார்த்தீர்களா எப்படியெல்லாம் அடிமை படுத்துகிறார்கள் என்று?!? ஆணாதிக்கம் ஒழிக.