புதன், மே 23, 2012

படித்த பகிர்வுகள்

எழுபத்தினான்கு வயது முதியோரை `புல்’ நாய் கடித்துக் குதறியது. முதியவர் மரணம். நாயிற்கு நிச்சயம் மரணதண்டனைதான் என பரவலாகப் பேசப்படுகிறது. அது குறித்த செய்திகள், இன்றும் பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன.

சம்பவம் நிகழ்ந்த மறுநாள், பத்திரிகைகளில், எந்தெந்த நாய்களை வீட்டில் வளர்க்கக்கூடாது என்கிற பரபரப்புச்செய்திகளுடன், வரிசையாகக் கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது வகை நாய்களின் புகைப்படங்களைப் பிரசுரித்து இனி அவைகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டிருக்கிறது முன்சிபல்.

அப்பட்டியலில் உள்ள ஒரு வகை நாய் என் தோழியின் வீட்டில் உள்ளது. லைசன்ஸ் கூட இல்லாமல், குட்டியிலிருந்து செல்ல நாயாக வளர்த்து வருகிறாள்.  இச்செய்தியினை பத்திரிகையின் வாயிலாகவும் தொலைக்காட்சியின் வாயிகாவும் கேள்விப்பட்டதிலிருந்து பதறிப் போயிருக்கின்றாள். தமது நாயை வீட்டில் பூப்பெய்த பெண்ணை  பூட்டி பாதுகாப்பதைப்போல் பூட்டி வைத்திருக்கின்றாள். வீட்டிற்குச் சென்றால், நாய் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது. எப்படித்தானோ கடவுளே....!!

%%%%%

தினமும் ஒரு கப் காப்பி அருந்திவந்தால், மனிதனின் ஆயுளை கொஞ்சம் நீட்டிக்கும் என்கிற ஆய்வு ஒன்றை மிக அண்மையில் படித்தேன்.

%%%%%%

ஜப்பானிய ஆண்களில் பலர் திருமணம் செய்யாமல் பிரமச்சாரிகளாகவே இருக்க விருப்பப்படுகிறார்களாம். காரணம், தாம்பத்தியத்தில் தம்மால் ஒரு பெண்ணை முழுமையாக திருப்தி படுத்த இயலாமல் போய்விடுமோ என்கிற பயமாம்..!

%%%%%

நியோர்க்கில் விநோதமான மோசடி ஒன்று நிகழ்ந்துள்ளது. இறந்துப்போன தமது தாயைப் போலவே உடை, சிகை அலங்காரம், உதட்டுச்சாயம், கூலிங் கிளாஸ், ஒஃக்சிஜென் மூலமாக மூச்சு விடுவதைப்பொன்ற பாவனையில் வேடமிட்டு வந்து ஒரு ரியல் எஸ்டேட் பணமோசடிக்காக கையொப்பம் இட்ட ஒருவரை அடையாளாங்கண்டு பிடித்துள்ளனர். குற்றம் உறுதியானால், பதிமூன்றிலிருந்து நாற்பது ஆண்டுகள் வரை சிறைவாசம் கன்ஃபர்ம். எப்படியெல்லாம்ம்???

%%%%%%

எங்க ஊரில் நடந்த தகராறு இது. அப்பா மகன் இருவருக்கும், தங்களின் வீட்டின் முன், தத்தம் கார்களை நிறுத்துவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்ப்பட்டதால், வாய்ச்சண்டை முற்றி கத்திக்குத்து வரை சென்று, மகன் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயிர் பிழைத்த மகன், முதுகில் குத்திய தன்தந்தையை தான்  மன்னிக்கப்போவதில்லை என்று சூழுரைத்துக் கொண்டிருக்கின்றார். தந்தை காவல்துறையில்...

%%%%%%

உலகத்திலேயே மிக கடினமான வேலை; ஒருவர் இறந்து விட்டார் என்று உறுதியாக உத்திரவாதம் வழங்குகிற வேலைதானாம்.! மருத்துவர்கள் லேசில் இதைச் சொல்லிவிட மாட்டார்களாம்.

%%%%%%

ஒரு மனிதனால் செய்ய முடியாத காரியம். தம்மைத் தாமே கழுத்தை நெறித்துக்கொண்டு, தற்கொலை செய்துக்கொள்வதாம். (எங்கோ படித்தேன் - தயவு செய்து முயலவேண்டாம்)...

%%%%%%

இன்று எங்களின் கம்பனிக்கு ஒருவர் வந்தார், நேர்முக தேர்விற்கு. பெயர் ஹேமாமாலினி. (ஆண்)

%%%%%

ரசித்த கார்ட்டூன் படம்