சனி, மார்ச் 03, 2012

சில தற்கொலைகள்

சில சம்பவங்கள்
தூக்க மாத்திரையால்
என்னைச் சாகடிக்க
பார்த்துள்ளன

சில வார்த்தைகள்
தூக்குக் கயிறாய்
என்னை நோக்கிப்
பாய்ந்துள்ளன

சில நிகழ்வுகள்
பாதாளம் வரை
நுழைய வைத்து
உயிர் மாய்க்க
வைத்துள்ளன

தண்டவாளத்தின்
கனவில் கூட
நான் தலை வைத்துள்ளேன்
இரைச்சலான சத்தத்தில்
உறக்கம் கலைந்து
பெருமூச்சு விட்ட
இரயில் பயணம்

நல்ல கத்தரிக்காய்
எப்படி இருக்குமென
தெரியாத நிலையில்
என் கணவன் பிள்ளைகள்..

நல்ல வேளை
நான் இருக்கேன்..


(அதீதம் இணைய இதழில் வந்த எனது கவிதை)