வெள்ளி, ஜனவரி 13, 2012

பீதி

தலையை யாரோ
அடித்துக் கொண்டே
இருப்பதைப்போல
மண்டையை பிடித்து
யாரோ கீழே தள்ளுவதைப்போல்

பசியே வராமல்
உணவே இல்லால்
வயிறு ரொப்பியிருப்பதைப்போல
அப்போ அப்போ வரும்
புளித்த ஏப்பம்
கெட்ட காத்தோ?

கேட்பதெல்லாம்
அகோரமாக
கண்ணின் காணும் காட்சிகளில்
வெறுமையை சுமந்துக்கொண்டு
எதிலுமே ஈடுபாடு ஏற்படாமல்

‘பர்ஃக்கின்ஷன்’
வியாதிக் காரியைப்போல்
முன் தினம் வந்த
கொலை மிரட்டல்
குறுந்தகவலை வெரித்துக்கொண்டு
நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
பழிபாவமறியா குழந்தையாய்
நான்..

எல்லாம் என்னோடு போகட்டுமே
ஒன்றுமே அறியாத
என்னவரிடம் வேண்டாம்
இந்த விபரீத விளையாட்டு

எதுவுமே கிடைக்காமல்
வெட்டியான மன உளைச்சல்
மட்டுமே சன்மானமாக..
இந்த இலக்கியத் துறையே
எனக்கு வேண்டாம்?