செவ்வாய், நவம்பர் 12, 2013

ஒலிக்காத இசை

நாய்கள் சொல்லும் 
அதன் பாஷையில்
மனிதன், 
குரைத்துக்கொண்டிருக்கிறான்..

%%%%%%

காற்று அப்படியே நிற்கிறது
உடலுக்குள் உஷ்ணம் தான் 
அசைகிறது..

%%%%%%%

எனக்குள் இயங்குகின்ற 
இசை..
எங்கும் ஒலித்ததில்லை
இதுவரை..

%%%%%%%

Pose கொடுக்காதபோது
click செய்யப்பட்ட புகைப்படத்தில் 
நானும் பேரழகியே... குழந்தைபோல்.!

%%%%%%%