திங்கள், ஏப்ரல் 22, 2013

பள்ளியாசிரியர்கள்.

எங்கள் ஊரில் தமிழாசிரியர்கள் (தமிழ்ப்பள்ளியில் போதிப்பவர்கள்) நிறைய பேர் எழுத்தாளர்களாக பவனி வருகிறார்கள். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அவர்களின் தமிழ்மொழி ஆற்றல் இயற்கையிலேயே அற்புதமாக அமைந்துவிடுவதுதான். 

இருப்பினும், அவர்களின் சிறுகதைகளை வாசித்தோமென்றால் எல்லோரும் ஒரே மாதிரியான சிந்தனைச் சூழலில் சிக்குண்டுதான் கதைகளைப் புனைந்திருப்பார்கள்..

உதாரணத்திற்கு மாணவனின் புறத்தோற்றம், படிப்பில் கவனமின்னை, பெற்றோர்களின் ஆடைகள் (அழுக்கான உடைகளில் பள்ளிக்கு வருவதால் அவமானம்) பெற்றோர்கள் முடி வாறியிருக்கும் பாணி, பெற்றோர்களின் நாக்கு முக்கா ரிங்டோன், சத்தம் போட்டுப்பேசும் பெற்றோர்கள் (அநாகரீகமாம்!) குளிக்காமல் பள்ளிக்கு வரும் பெற்றோர்கள், குழந்தைகளின் வளர்ச்சியை பள்ளியில் வந்து கண்டுகொள்ளாத நிலை. (மலாய்,சீனப் பள்ளியில் - உடனே கண்டனக்கடிதம் வரும், தமிழ்ப்பள்ளியில் என்னைப்பொருத்தவரையில், எனக்கு வந்ததேயில்லை, அழைப்பு விடுவார்கள்.. மகன் ரொம்ப குறும்பு என.) பிள்ளைகளின் பேக் சரியில்லை.. தூய்மையில்லை.. பெற்றோர்கள் ரௌடிகள்...அது இது என, தமது கதைகளின் கதை மாந்தர்களாக இவரகளை வைத்து கதைதனை வடித்து விடுவார்கள். அல்லது பள்ளியில் நடக்கும் அரசியலை நுழைத்து அது சரியில்லை இது சரியில்லை என்கிற புராணத்தைச் சொல்ல ஆரம்பிப்பார்கள்...

அதாகப்பட்டது, கதைகளின் கரு என்னவென்றால், எல்லா அவலத்திற்கும் யாராவது இருப்பார்கள் பின்னணியில், அந்த  ஆசிரியரைத்தவிர. !!!?? அவர் மட்டுமே நல்லவர் அங்கே. போதிக்கின்ற வேலைகளை விட்டுவிட்டு அவலங்களைக் கண்காணிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

மாணவர்களின் கல்வி மற்றும் பொது அறிவு வளர்ச்சியில், அந்த ஆசிரியர் ஆற்றிக்கொண்டிருக்கும் அரிய பங்கு பற்றிய அற்புதமான கதைகளை நான் இதுவரையில் வாசித்ததில்லை. (இருக்கலாம், என் கண்ணில் இன்னும் படவில்லை).

சமூதாய அக்கறை அதிகம் உள்ளவர்கள் ஆசிரியர்கள். அதைவிட முக்கியம் மாணவர்களின் வளர்ச்சி.
 

சாக்லெட்

விளம்பரமே இல்லாத
ஒரு சாக்லெட்டும்
அதிக விலையில்
விற்கப்படும்
ஒரு சாக்லெட்டும்
அதே சுவையில்..
சாக்லெட் ஒரு உவமைதான்!

சிதறல்கள்

நினைவுகள்
தவிடுபொடியாகும் போது
உறவுகள் சிதறல்களாகின்றன
நிலைக் கண்ணாடி கூட
தூள் தூளாக...
பிம்பத்தைக்காட்டாமல்..