வெள்ளி, நவம்பர் 18, 2011

வேண்டாம் வம்பு

யாரையும் வதைக்காதே
எவரையும் கொல்லாதே
வம்பாலும், அன்பாலும்..

வராதே

எதிலுமே நான் இல்லை
நீ இருப்பதால்
வெ(வ)ந்து போகிறேன்

கற்றல் கலை

அன்பு வைக்கும் பெண்களை 
நீ என்றுமே சந்தேகித்து 
பொறாமை கொள்வில்லையே..!
நானும், கற்றுக்கொண்டேன்
ஆண்களை மதிக்க 
உன்னைப்போல்..

காதல் கண்ணாமூச்சி

கண்டுபிடிக்கின்றேன் 
என்கிற விஷப்பரீட்சையில் 
மீண்டும் மீண்டும் 
தொலைந்து போவதே 
எனக்கு வாடிக்கை, 
அது உனக்கு வேடிக்கை..

எழுத்து யாசகி

எவனோ ஒருவன் 
எழுத்தை யாசிக்கிறான்
இருட்டில் இருந்து 
அதை நான் வாசிக்கிறேன்...

நீ மட்டுமே என்னுள்

அடை மழை
வெள்ளம்
சுனாமி
பூகம்பம்
எரிமலை
சூறாவளி
சுடும் சூரியன்
உலகமே அழியப்போவுது
உன்னை மட்டும் எப்படி ரசிப்பது?

நானும் குழந்தையே

குழந்தைகள் தினத்தில், 
குழந்தையைக் கொஞ்சுகிறான், 
என்னைத்திட்டுகிறான்.. 
அவன் தான் ஒரு முறை 
என்னையும் குழந்தை என்றான்...

ஒரு உபதேசம்.


ஆடைகளை அயர்ன் செய்த உடனே அணிந்துக்கொண்டால், அந்த ஆடைகள் விரைவாக சுருக்கம் கொள்ளுமாம். அயர்ன் செய்து குறைந்தது ஏழு அல்லது எட்டு மணி நேரம் கழித்து அணிந்துக்கொண்டால், புதிதாக அயர்ன் செய்யப்பட்டது போல், வேலை முடிந்து வீடு செல்லும் வரை அப்படியே மடிப்பு கலையாமல் இருக்குமென்று நேற்று என் தோழி ஆலோசனை வழங்கினாள். 
அய்ர்ன் செய்ய நேரமில்லாததால்,நேற்று யூனிபோர்ம் அணிந்துச் செல்லவில்லை. பிசி..பிசி..பிசி தான், எப்போதுமே!!! :(
உபதேசம் உங்களுக்குத்தான்..நேக்கு அல்ல. நான் உடனே அயர்ன் செய்து,உடனே அணிந்துக்கொண்டு வேலைக்குக் கிளம்பறேன்.. 

எல்லோரும் நல்லவர்கள்

பழைய திரைப்படம்
கிலைமக்ஸ்
விலகும் மர்மங்கள்
போலிஸ் வருவார்
நாம் கைத்தட்டுவோம்
குதூகலமாக..குழந்தைகளாக

இயற்கை ரசனை

பூ சிகப்பு, இலை பச்சை
மலர்ந்தது 
ஒரு காலை பொழுது

புத்தகம்

சிரிக்காமல் 
உனது பக்கங்களை 
புரட்டமுடியவில்லை என்னால்.! 
அது நகைப்புக்குரியதல்ல 
என்பது தெரிந்த போதிலும்.!

ஒழுக்க சிந்தனையும் நாமும்

ஒழுக்கத்தைப்பற்றி, அன்றும் சரி, இன்றும் சரி நமது உயர்ந்த சிந்தனையில் உதித்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவனிடம்/ஒருவளிடம் சென்று உடலுறவு (காதல்/கள்ளக்காதல்) வைத்துக்கொள்வது மட்டும்தான் என்பதைப்போல் ஆகிவிட்டது நிலை.! 

ஒழுக்கமின்மையைப்பற்றி 100 காரணங்கள் இருந்தால், அதில் இந்த செய்கை நடுவிலோ அல்லது இறுதியிலோ தான் இருக்கும். முதலில் இருக்க வேண்டிய பல ஒழுக்கச்சீர்கேடுகள் நிறைய இருப்பினும், இதை மட்டும் பிடித்துகொண்டு, ஒருவரது அந்தரங்கத்தை ஆராய்ந்து, அவனுக்கு ஒழுக்கமில்லை, அவளுக்கு கற்பில்லை என இன்னமும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது நமக்கெல்லாம் ஒரு சுவாரிஸ்யமான பொழுது போக்கு.! ஏன் இப்படி?? இலகுவாக புண்படுத்தலாம் என்பதாலா? விரும்பிச்செய்கிறவனும் பெண் மீது பழிபோட்டு தப்பிக்கப்பார்க்கும் சமூகமிது. எச்சரிக்கை!!!

கண்ட இடத்தில் காரி துப்பிக்கொண்டு,காது குடைந்துக்கொண்டு வேலைக்குப் போகும் பெண்களின் ஒழுக்கத்தைப்பற்றி பேசுகிறவனை முதலில் ஜெயிலில் போடவேண்டும்

வாசகங்களும் வாக்கியங்களும்

பொட்டு வைத்து. 
கோடு இட்டு! 
காதுமடகள் வரைந்து? 
நட்சத்திரப் பூக்களை மாலையாக்கி** 
ஆடையிட்டு {[]} 
அடைக்கலம் கொடுத்து ()
சாய்ந்து சரிந்து கொடுத்து//
கூட்டிக்கழித்து + -
கன்னாபின்னான்னு கோலமிட்டு அ ஆ இ ஈ உ ஊ
நடுநடுவே இதையும் #@&^
அலங்கரித்துமா இன்னும் உன்னைக் கவரவில்லை!!??

விபத்து

அம்புலன்ஸில் உள்ளவர்களை
காப்பாற்ற வருகிற்து
இன்னொரு அம்புலன்ஸ்