திங்கள், அக்டோபர் 15, 2012

புதிதாக புரிவதற்கு ஒன்றுமில்லை

புழு நெளியும் ரவையில்
புதிய உப்புமாவா?

வண்டு மொய்க்கும் அரிசியில்
ஆத்தாவுக்கு கூழ்..?

காம்புகள் காய்ந்த
கனிகள் என்ன
பறி(ழ)க்கப்படாததோ?

நுணி உடையா
வெண்டை
பிஞ்சாகுமா?

தேன் தீர்ந்த மலரில்
இன்னும் என்ன இருக்கு
உதிரும் இதழ்களைத்தவிர..!?

புகைப்போட்ட கனியின்
சுவையும் ருசியும்
நம்(பிக்)கையில் இல்லை

செவுல் கறுத்த செத்த மீன்
கடல் நீரை
முத்தமிட்டு நாளாகியிருக்கலாம்..

களையிழந்த கண்களையாவது
பதுக்கி வை
ஒளியற்ற ரகசியங்களை
வெளியே சொல்கின்றன..