வெள்ளி, டிசம்பர் 30, 2011

அறிவிப்பாளர்கள்

மேடையில் அறிவிப்பாளர்
மற்றவர் பேசுகிறார்
மைஃக் அவரிடம் செல்கிறது
இவர் சிரிக்கிறார்
மைஃக்கை இவரின் வாயருகே வைத்துக் கொண்டு....
இவரின் சிரிப்பொலியையும்
நாம் கேட்கவேண்டும்
ஏன்னா, இவர் தான் அறிவிப்பாளர்..



கவிதையும் கழிசடையும்

மார்வாடியிடம் நகையை அடகு வைத்தேன்
திருப்பிக்கொள்ள முடிந்தது
மார்வாடி மகளிடம் மனதை அடகு வைத்தேன்
மூழ்கிப்போய் விட்டது

சுஜாதா..

படித்ததில் சிரித்தது

கண்ணாடி

என்னுடைய கவலையென்பது
அவருடைய கவலை
அவருடைய கவலையும்
அதுவே.

என்னுடைய மகிழ்ச்சியென்பது
அவருடைய மகிழ்ச்சி
அவருடைய மகிழ்ச்சியும்
அதுவே.

என்னுடைய விதண்டாவாதம் என்பதும்
அவருடைய விதண்டாவாதம்
அவருடைய விதண்டாவாதமும்
அதுவே.

ஒரே வீட்டில்
ஒரே துருவம்