வெள்ளி, ஜனவரி 06, 2012

ஜீவனற்றவளாய்

வலியால் உதிக்கின்ற
வார்த்தைகள் யாவுமே..
வலியால் உணரப்பட
எழுதுகிறேன் ஒரு
நிவாரண சாசனம்...

நீ வரைந்த
சொற்கள் யாவுமே
நிரந்தரமாய்
தனிமையின் நிழல் வட்டமாய்
பிரபஞ்சத்தில் என்னோடு
இன்றும் என்றும்
நீ, ஜீவித்திருந்த போதிலும்..

அதுவும்
மௌனம் தானே
இதுபோல்..
சேகரித்து வைத்த சொல்
சொந்தமாய் பேசட்டும்
ஜீவனற்ற என் இதயம்
இரண்டாய்ப் பிளக்கட்டும்
பரவாயில்லை..

உன்னுடனேயான எனது தனிமை
பறிக்கப்பட்ட பொழுதுகளில்
ஜீவனற்று நான் உணரும்
இந்த நொடி
மரண வலி
உனக்கும் வரட்டும்
பிடி சாபம்..!!

பூஜியம் தான்

ஆயிரக்கணக்கான
தனி மனித ஒழுக்கங்களை
பட்டியலிட ஆரம்பித்தேன்

யோசிக்க யோசிக்க
வந்துக் கொண்டே இருந்தது

சிந்தனையில்
உதித்ததையெல்லாம்
பதிவிட்டேன்
எழுதினேன்
எழுதினேன்
எழுதினேன்
நிறுத்தாமல் எழுதினேன்

எண்ணிக்கை
ஆயிரத்தைத் தாண்டியது

நான் பூஜியமானேன்.