வெள்ளி, ஜனவரி 06, 2012

பூஜியம் தான்

ஆயிரக்கணக்கான
தனி மனித ஒழுக்கங்களை
பட்டியலிட ஆரம்பித்தேன்

யோசிக்க யோசிக்க
வந்துக் கொண்டே இருந்தது

சிந்தனையில்
உதித்ததையெல்லாம்
பதிவிட்டேன்
எழுதினேன்
எழுதினேன்
எழுதினேன்
நிறுத்தாமல் எழுதினேன்

எண்ணிக்கை
ஆயிரத்தைத் தாண்டியது

நான் பூஜியமானேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக