வியாழன், டிசம்பர் 22, 2011

ஆண் பார்வை

முன்னே நடக்கும் போது
பின்னே ஒரு உருத்தல்

கீழே குனியும் போது
மேலே ஒரு நெருடல்

நேர் பார்வையிலும்
நேர்மையில்லாமல்..

பேச்சின் போது
அகலமாய் விரியும் கண்கள்

எதாவது தென்படாதா!?
என அங்கும் இங்கும்
ஏக்கத்துடன்..

எதோ ஒரு ஆவலில்
அலைபாயும் சுமையுடன்

“ நீங்களெல்லாம் அக்கா தங்கைகளோடு பிறக்கவில்லையா?”
என்கிற வசனம் எங்களுக்கே புளித்துத் தான் போனது.