வியாழன், ஏப்ரல் 12, 2012

வேதம் என்பது?

வேதங்கள் நான்கு..
அவை என்ன சொல்கின்றன?
யாரால் எழுதப்பட்ட்து?
யார் யாருக்கு கொடுக்கப்பட்ட்து?
வேத்த்தில் வர்க்கப்பிரிவுகள் உள்ளனவா?
வேதம் சமஸ்கிருத மொழியில் உள்ளனவா?
வேத்த்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
யாருக்குச்சொந்தம் அது?
ஏன் எல்லோருக்கும் வேதம் போதிக்கப்படவில்லை?
இறைவனால் அளிக்கப்பட்ட்து என்றால், ஏன் எல்லோருக்கும் வேதம் தெரியவில்லை?
ராமாயணம்ம் மஹாபாரதம் வேத்த்தின் ஒரு பிரிவா?
வேதம் ஓதுகிறவர்கள் எல்லோரும் பிராமணர்களா?
வேதங்கள் முதலில் தமிழில் தான் இருந்த்து, ஆரியர்களின் வருகையால், அது மற்றப்பட்டது என்பது சரியா?

வேதங்களைப்பற்றிய சந்தேகங்களை, எனது தமிழ்நாட்டு நண்பர் ஒருவருக்கு மெயில் மூலமாக அனுப்பி வைத்தேன். அவரின் எளிய விளக்கம் என்னை அதிகம் கவர்ந்து விட்டதால்,  இதை இங்கேயும் பகிர அனுமதி கேட்டுக்கொண்டேன்.


வேதங்கள் யாராலும் எழுதப் படவில்லை.வாய் வழியாகவே குரு அவரின் சீடர்கள் என்று பரப்பபட்டவை. வேதங்களை  தொகுத்து கொடுத்தவர் வியாசர். வேதம் சமஸ்க்ரித மொழியில்தான் உள்ளது. ஒரு காலத்தில் அனைவரும் வேதம் சொல்லிக்கொண்டுதான் இருந்தனர். பின் அவற்றை விட்டுவிட்டனர். பிராமணர்களில் ஒரு சிலர்தான் வேதம் பயில்கின்றனர். ராமாயணம் ,மகாபாரதம் வேதத்தில் வராது . அவை புராணங்கள் .

முதலில் ஆரிய / திராவிட வாதமே தவறு. அப்படி எதுவும் இல்லை/ ஆங்கிலேயர் பிரித்தாளும் கொள்கைகியின் விளைவுதான் ஆரிய திராவிட வாதம். ஆரியப் படையெடுப்பு இதெல்லாம். அதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை குழப்ப உபயோகித்துக் கொள்கின்றனர்.

//வேதம் ஓதுகிறவர்கள் எல்லோரும் பிராமணர்களா
?// இன்றைய கால கட்டத்தில் ஆமாம். ஆனால் முன்பு ரிஷிகளில் கூட பலர் பிராமணர் அல்ல.

வேதம் அனைவருக்குமே சொல்லித் தரப்பட்டது
, கால போக்கில் அனைவரும் விட்டுவிட்டனர் (ப்ராமானர்களையும் சேர்த்துதான்)

நான்கு வேதங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான விஷயங்களை சொல்கிறது. உதாரனத்திற்க்கு அதர்வண வேதம்
, விமானம் செய்வது /மருத்துவக் குறிப்புகள் போன்றவற்றை சொல்கிறது.

நன்றி: கார்த்திக்