ஞாயிறு, டிசம்பர் 09, 2012

உருவாகிறாள் ஒரு திரேசா

வேலைக்காரியை வேலை வாங்கு என்கிறது ஒரு கூட்டம். 
வேலைக்காரியை வைக்கிற இடத்தில் வைக்கவேண்டும் என்கிறது ஒரு கூட்டம்.
வேலைக்காரியின் மனசு கல்லால் செய்தது என்று நினைக்கிறது ஒரு கூட்டம்.
வேலைக்காரி என்று வந்து விட்டால், அவள் அவளின் உணர்வுகளை அடமானம் வைத்துவிடவேண்டும் என்கிறது ஒரு கூட்டம்.
அவளுக்கென்று ஆசாபாசங்கள் கூடாது என்கிறது ஒரு கூட்டம்.
பிட்டத்தால் நகர்ந்துகொண்டிருப்பவர்களுக்கும் வேலைக்காரியென்றால் எளக்காரம்.
எதற்கெடுத்தாலும் நான் உனக்கு சம்பளம் தருகிறேன் என்று சொல்லி மிரட்டுகிறது ஒரு கூட்டம்..
திருடுவாள் என்கிறது ஒரு கூட்டம்
தின்னுபுட்டு தூங்குவாள் என்கிறது ஒரு கூட்டம்
இவர்களுக்கிடையில், யாரையும் உதாசினம் செய்யமனமில்லாமல், மௌனமாக உருவாகிக்கொண்டிருக்கின்றாள் ஒரு அன்னை திரேசா.