ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

அபகரிப்பு


இஷ்டப்பட்ட
பெண்ணின் பெயரில்
கவிதைகள் குவிகின்றபோது

அதே பெயர் கொண்ட
பெண்ணின் மனம்
பறிபோவதேனோ..!!!

இனிய இலக்கிய பொழுது

எது இலக்கியம்? எல்லாமே இலக்கியம்தான். என்னை எதோ செய்த இலக்கியம். என்னை எதுவும் செய்யாத இலக்கியம். அவ்வளவே.

சுற்றி நடப்பதைச் சொல்லிக்கொண்டே இருங்கள்.. யார் என்ன சொன்னால் என்ன!
சுவரில் குழந்தைகள் கிறுக்குவதைப்போல், எதையாவது கிறுக்கிக்கொண்டே இருங்கள். இலக்கியமாகும் ஒரு நாள்.. இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று யாராலும் சொல்ல முடியாது.

பெண்கள் அதிகமாக எழுத வேண்டும் - அற்புதமான இலக்கியச் சூழல் உருவாகும்

எழுதுவதற்கு ஒன்றுமே வேண்டாம்.. பகிர ஒரு களம் கிடைத்தால் போதும்.

இலக்கியத்தைப் பல கூறுகளாகப்பிரிக்கலாம். அதில் பெண் எழுத்து இலக்கியத்திற்குச் சொத்து.

இலக்கியம் பொழுதுபோக்கு அல்ல, ஆனால் நீ நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அது உன் பொழுதைப் போக்கும் இனிமையாக. நான் பொழுது போக்கிற்காக எழுதவில்லை என்றால், சூரியன் நின்று விடுமா என்ன.

'எங்கள் ஊர் இலக்கியவாதிகளில் சிலருக்கு, அவர்களின் கால்களைப் பார்த்தே பல நாள் ஆகியிருக்கும். செருப்பு கூட எந்த செருப்பு யாருடையது என்ன கலர் போன்றவற்றைக்கூட சரியாகச் சொல்ல முடியாத நிலையில் வானத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டே இருப்பார்கள்..அப்பேர்பட்ட இலக்கியவாதிகள். அப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம், சுற்றி நடப்பதை அப்படியே எழுதுங்கள். இலக்கியம் வந்துவிடும். 

இலக்கிய கூட்டங்களுக்கு இங்கே பெண்கள் இவ்வளவு பேர் கூடியிருப்பதைப்பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஆதவன் தீட்சண்யா

ஒரு இலக்கிய நிகழ்விற்குச்சென்று வந்தேன். அங்கு பகிரப்பட்ட விவரங்களில் நான் உள்வாங்கியது