திங்கள், பிப்ரவரி 10, 2014

பண்ணையாரும் பத்மினியும்

நகைச்சுவைத் ததும்பும் வசனங்கள். சிரிப்புக்கு பஞ்சமில்லை. சோகமுமில்லை. எல்லோரிடமும் எதார்த்தமான நடிப்பு.

நாம் நினைப்பதைப்போல் அங்கே எதுவும் நிகழவில்லை.
திருப்புமுனை வரும் என்று ஏமாறுகிறோம்.

நான் இறந்தால்? என்கிற வசனம் வரும்போது, இசை பேசுகிறது. இறுதிவரை ஒண்ணும் நடக்கவில்லை.

வில்லியான மகளால் வில்லங்கம் வரும் என்றால், அதுவும் இல்லை.

வில்லன் உண்டு, சண்டையே போடவில்லை.

வளைந்து நெளிந்து வேகமாக ஓடும் பஸ் - என்னாகும் என்கிற நெருடல்.. திக் திக் என்கிறது.. ஒன்றும் நடக்கவில்லை.

அசம்பாவிதம் நடக்குமோ என்றால்..ஹுஹும் இல்லை.

காதல் கைகூடாதோ.. அப்படி எதுவும் இல்லை.

காருக்கு எதும் ஆபத்து..? இல்லையே..

அப்பாவி பண்ணையார்.. அவருக்கு என்னாகும்? ஒண்ணும் நடக்கவில்லை.

இறுதியில் குடும்பத்துடன் பயணம் - அப்போதும் இப்பாவிமனம் நினைக்கிறது..கூண்டோடு கைலாசமா? அதுவும் இல்லை.

இப்படி ஏமாற்றியபடியே நகர்கிறது `பண்ணையாரும் பத்மினியும்’ என்கிற திரைப்படம்.

இருப்பினும் சன்ஸ்பன்ஸ் இறுதிவரை தொடர்கிறது.

கடைசியாக ஒன்றுமட்டும் புரிகிறது. அடுத்தவனுக்கு எதாவது ஏடாகூடமாக நிகழவேண்டுமென்று நினைக்கின்ற நமது மனம், நம்மைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கிறது..

திரையறங்கைவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்.

மனம் மட்டும் கிசுகிசுக்கிறது.. நல்ல படம்.