செவ்வாய், ஜனவரி 31, 2012

பெண்ணுரிமை

சிரித்தாலும் விழுவான்
அழகாய் சிரிக்கிறாய் என,

முறைத்தாலும் விழுவான்
கோபம் பிடிச்சிருக்கு என,

மார்டனா உடுத்தினாலும்
மேலும் கீழும் நோக்குவான்

முக்காடு போட்டாலும்
எதையெதையோ தேடுவான்

பேசாமல் இருந்தாலும்
மௌனமே உன் மொழி
பிடிச்சிருக்கு என்பான்

படபடவென பேசினாலும்
பட்டாசு நீ,
விரும்புகிறேன் உன்னை என்பான்..

தென்றலாய் இருந்தால்
வருடுகிறாய் என்பான்

மின்னலாய் இருந்தால்
தாக்குகிறாயே என்பான்

ஆண்கள் நடத்திய
பெண்ணுரிமைப் போராட்டங்கள்
தலைதூக்கிய காலகட்டத்தில்

அழகாய் இருந்த எங்க பாட்டி
வெளியே வரத்துவங்கினாள்
நாங்கள் அடைப்பட்டுக்கிடக்கின்றோம்
அடிமையாய்..

பெண்ணியம் காக்க.