வெள்ளி, செப்டம்பர் 21, 2012

எனதானது..

கண் சிமிட்டல்

கண் சிமிட்டும்
கேமராக்களின் முன்
கலகலப்பாக இருக்கின்றோம்
காலம் கடந்த பொழுதுகள்
நம்மைப் பார்த்து
கண்சிமிட்டுவதற்காக..

%%%%%%%

நட்பு
தூசு படிந்த நீரை
பாதுகாத்துக்கொண்டிருக்கின்றேன்
மீன் செத்துவிடக்கூடாது
என்பதற்காக...

%%%%%%%

எனதானது

எனக்கென்ற பாணியில்
தொற்றிக்கொள்ளும் உன் பாணி
எனதானதை
உனதாக்கிக்கொண்டிருக்கின்றது.

%%%%%%%

விழுப்பம்


ஒழுக்கம் ஒளிந்துக்கொண்டு
நல்ல பெயர்
வாங்கிக்கொள்கிறது.

%%%%%%

இனி என்ன?

இரவு நன்றாகத்தான்
போய்க்கொண்டிருக்கு
இடையில் விரைவாக
உறக்கம் வருதே..

வேறொரு நான்

நான் தான் யோசித்தேன்
நான் தான் சொற்களை அடுக்கினேன்
நான் தான் எழுதினேன்
நான் தான் பெயர் வைத்தேன்
நான் தான் கவிதை என்றேன்
நானே வியந்தேன்
நானே புகழ்ந்தேன்
மறுவாசிப்பில்
வேறொரு நான்
முன்பிருந்த என்னை
எச்சரித்தேன்
இதுபோலும் இனி எழுதாதே...