வெள்ளி, செப்டம்பர் 21, 2012

வேறொரு நான்

நான் தான் யோசித்தேன்
நான் தான் சொற்களை அடுக்கினேன்
நான் தான் எழுதினேன்
நான் தான் பெயர் வைத்தேன்
நான் தான் கவிதை என்றேன்
நானே வியந்தேன்
நானே புகழ்ந்தேன்
மறுவாசிப்பில்
வேறொரு நான்
முன்பிருந்த என்னை
எச்சரித்தேன்
இதுபோலும் இனி எழுதாதே...

1 கருத்து: