வெள்ளி, மே 24, 2013

சக்திவாய்ந்த ஊடகம்


மலேசியாவில் எல்லா ஊடங்களும் அரசாங்கத்தின் கீழ் கைக்கூலிகளாக செயல்படுகின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி உற்பட.

எல்லாமும் அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சாரங்களின் ஆயுதமாகவே திகழ்கின்றன. ஊடகத்தினை செவிமெடுத்தாலே நாமே வாய்மூடி, `அடப்பாவி, இப்படியா பொய் சொல்வே.’ என்று முனகவேண்டிய நிலை வந்தது/வருகிறது.

எதிர்க்கட்சிக்கு எதிராக செய்தி வாசித்த ஊடனகப்பணியாளர்களையும் தொலைப்பேசியில் அழைத்து தாறுமாறாகத்திட்டினார்களாம் பொதுமக்கள்.. நண்பர் பகிர்ந்தார்.

தொடர்ந்து பிரசாரங்கள்..அதைச்செய்தார்கள் இதைச்செய்தார்கள் என... வளர்ந்த நாடு, மக்கள் வளர்ச்சி.. அது இது என்று, இன்னமும் தொடர்கிறது புள்ளிவிவரங்கள்...

நேற்று கூட எதிர்க்கட்சியின் இரு பத்திரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலிஸ் எல்லாப்பத்திரிகைகளையும் அபகரித்துக்கொண்டார்கள். மக்களுக்கு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் போய்ச்சேரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது நம் அரசாங்கம். பொது ஊடங்கள் எல்லாவற்றிற்கும் கதவடைப்பு.

இருப்பினும் மக்கள் ஒரே கொள்கையோடு போராடுகின்றார்கள்..எதிர்க்கட்சி கூட்டணிகள் பேசும் கூட்டத்திற்கு மக்கள் புயலாய் வெள்ளமாய் திரள்கிறார்கள்..  சளைக்காமல். மாற்று, மாற்று.. வெளியேறு வெளியேறு.. ஏமாற்றாதே ஏமாற்றாதே... UBAH UBAH.. REFORMASI .. REFORMASI என்கிற கோஷங்களை எழுப்பியவண்ணம்.

இதற்கு முக்கிய காரணமாக இருந்து தமது சேவையினை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருப்பதில், முகநூல் முதல்நிலையிலே உள்ளது. முகநூலின் சேவை அளப்பரியது. ஒவ்வொரு தனிநபருக்கும் செய்தி சொல்லிக்கொண்டிருக்கின்றது.

எல்லா கதவடைப்புகளுக்கும் திறவுகோள் இந்த முகநூல். அரசாங்கத்தால் இனி எதையும் மூடி மறைத்து செயல்பட இயலாது என்பதனை பறைச்சாற்றிய ஊடகம் இந்த முகநூல்.

அரசியல் சுலபமேயல்ல என்பதனை சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு அற்புத ஆயுதம் இந்த முகநூல்.

கழுத்துப்பட்`டை’ கட்டிக்கொண்டு பார்லிமெண்ட் சென்று பந்தாவாக உலாவந்த காலத்தை மலையேறவைத்துள்ளது சமூகவலைத்தளம்.

தலைவர்கள் தெருவில்..வேர்த்து விருவிருக்க.!

இனி எதுவும் சுலபமல்ல....

இச்சக்தி வாய்ந்த ஊடகத்தில் நமக்கும் பங்குண்டு என்பதில் மகிழ்ச்சியே. முகநூலில் ஒன்றுமில்லை என்று யாராவது சொன்னால்... அவனுக்கு மூளையில்லை என்று அர்த்தம். அரசாங்கத்தையே சாய்க்கின்ற சக்திவாய்ந்த ஊடகம் இது. மறுமலர்ச்சிக்கு வித்து.

உலக அரசியலும் மக்களின் மூலமாக வரும்போது, அதுவும் பரிச்சயமாகிறது. மக்கள்தான் மக்கட்தொண்டரகள். ஜனநாயக ஆட்சியில் மக்கள்தான் தலைவர்கள்.

காதல் காமமென்று ஒரு சில கழிசடைகள் சீரழிந்தாலும்.. முகநூல் போற்றுதலுக்குரியதே.