சனி, மார்ச் 15, 2014

அரை மணிநேரம்

வீடு மாறுகிறோம், ஏற்கனவே உள்ள செடிகள் எல்லாவற்றையும் அந்த வீட்டுக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. காரணம் அங்கேயே நிறைய செடிகளை நட்டுவைத்து விட்டோம். பெரிய பெரிய ஜாடிகளில் உள்ள பழைய செடிகளை அப்படியே தூக்கிப்போட்டுவிடலாம் என்றிருக்கின்றோம். என்றார், எனக்குத் தெரிந்த ஒருவர்.

அப்படியா.? வீசாதீர்கள். எனக்குக் கொடுங்கள், நான் பராமரிக்கின்றேன். என்றேன். 

எப்படிக்கொடுப்பது.? பெரிய ஜாடிகள், உங்களின் காருக்குள் நுழையாதே. என்றார்.

ஹ்ம்ம்.. அப்படியென்றால் பரவாயில்லை. செடியை மட்டும் கொடுங்கள். நான் பிழைக்கவைத்து பாதுகாக்கின்றேன்.. என்றேன்.

இல்லை ..இல்லை நான் உங்களுக்கு ஜாடிகளோடு என் லாரியில் கொண்டுவந்து வீட்டிலேயே கொடுக்கிறேன், என்றார்.

இன்று காலையில் அழைத்தார். எங்கும் செல்கிறீர்களா? என்கிற கேள்வியோடு. இப்போது இல்லை. இருப்பினும் மதிய உணவிற்குப்பிறகு கொஞ்சம் சாமான்கள் வாங்கவேண்டியுள்ளது. சூப்பர் மார்க்கெட் செல்வேன் என்றேன்.

செடிகளைக் கொண்டு வரவா? கேட்டார்.
சுமார் எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று சொன்னால், காத்திருக்கிறேன். என்றேன்.
இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன், என்றார். நான்கு `அரை’ ஆகிவிட்டது.

இப்போது மீண்டும் அழைத்து, அட்ரஸ் சொல்லுங்கள். என்றார். சொன்னேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன், என்றார்.

செலவு சாமான்கள் வாங்க நாளைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.