ஞாயிறு, ஜனவரி 18, 2015

ஐ - படம் சூப்பர்.
ஒரு சராசரி ரசிகையான எனக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்திருக்கின்றார் சங்கர்.
எல்லாத்துறையிலும் ஒருவரின் வளர்ச்சியின் மேல் பொறாமைகொள்கிறவர்கள் சிலர் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சில கெடுதல்கள் செய்வதற்கு பலமுயற்சிகள் எடுப்பார்கள். அது அவதூறு செய்வதில் ஆரம்பித்து அயல் நாடுகளுக்குச்சென்று செய்வினை செய்வதுவரை தொடரும்.
எதிலுமே சாதிக்காத நாம்,முகநூலில் கொஞ்சம் கூடுதல் `லைக், கமெண்ட்ஸ்’ வாங்கிவிட்டாலே சிலர் வயிற்றெரிச்சலில் புகைந்து வெளியே அவதூறு பரப்பிவருவது கண்கூடு.
பொறாமை வயிற்றெரிச்சல் எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வாழத்துடிக்கின்ற ஒரு சாதாரண அப்பாவி இளஞனை வீழ்த்துகிறது, பாதிக்கப்பட்ட அவன் எப்படி அவர்களையெல்லாம் பழிதீர்க்கிறான் என்பதுதான் கதை. அதை சராசரி ரசிகனுக்கு பரபரப்பாக பிரமாண்டமாகக் கொடுத்திருக்கின்றார் சங்கர்.
சோர்வில்லாத கதையோட்டம்.
அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு.
நகைச்சுவை கொஞ்சம் தேவலாம்.
பழிதீர்க்கப்பட்டவர்களின் நிலையினைப்பார்த்து சந்தானம் அடிக்கும் லூட்டி ரகளை.
பாடல்கள் அருமை.
சண்டைக்காட்சிகள் பிரமிப்பு.
படம் முடிந்துவிட்டது. பெயர் பட்டியல் வரத்துவங்கிவிட்டன. மக்கள் இருக்கையை விட்டு எழவே இல்லை. லிங்கேசனுக்கு ஒரு விடிவு வராதா? என காத்திருக்கின்றனர். இறுதியாக அந்த பரிதாபத்திற்குரிய பாத்திரத்தின் கொஞ்சம் தேறிய முகத்தைப் பார்த்த பிறகுதான் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுத்து நகர்கின்றார்கள்.
சியான் விகரம் - உங்களின் உழைப்பு உங்களை மிக உயரத்தில் அமரவைத்துவிட்டது.. வாழ்க. கண்கலங்க வைத்துவிட்டீர்கள். அற்புத நடிப்பு ( மற்றவர்கள் உழைக்கவில்லையா? என்பவர்களுக்கு... கலைக்காக உழைப்பதும், நான் என் குடும்பம் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக உழைப்பதும் ஒன்றாகாது. கலை என்பது பரபரப்புச்சூழலில் வாழ்கிற ஒரு மனிதனின் உணர்வு சம்பந்தப்பட்டது.)
மலேசியாவில் அரங்கம் நிறைய கூட்டம். வார இறுதியில் டிக்கட் கிடைக்கவில்லை. திரையரங்கில் அலையலை என கூட்டம் அலைமோதுகிறது.
வசூல் சாதனையை முறியடிக்கின்ற அற்புத படம் - குடும்பத்துடன் ரசித்து மகிழலாம்.
வரிசையாக பல படங்கள் நம்மை ஏமாற்றிய பிறகு சங்கரின் ஐ- தெம்பைத்தந்துள்ளது.
மனதார ரசித்தேன். கண்டு களியுங்கள்