வியாழன், மே 29, 2014

அழகு குறிப்பு

அழகுக்குறிப்பு.. (பெண்களுக்கு மட்டும். ஆண்கள் படிக்கவேண்டாம்)

பெண்கள் நாம், முகக்கிரீம்களை வாங்குகிறபோது, எப்போதுமே ஒரு செட் ஆகத்தான் வாங்குவோம். அப்படித்தான் கிடைக்கும். Skin milk, toner and moisturiser. தனித்தனியே வாங்குவதைவிட மொத்தமாக வாங்குகிறபோது, விலையில் அதிக மாற்றம் இருக்கும். செலவைக் கொஞ்சம் குறைக்கலாம். 

கண்டிப்பாக, இந்த மூன்றும், முக ஒப்பனைக்கு அவசியத்தேவை. இவைகள் இல்லாமல் முகத்தை ஒண்ணும்பாதியுமாக அலம்பிவிட்டு, பவுடரையோ அல்லது பவுண்டெஷனையோ பூசிக்கொண்டால், சருமம் வறண்ட தோற்றத்தைத் தரும். வெப்பத்தின் தாக்கத்தை முகத்தின் தோல் ஏற்றுக்கொள்ளது, முகம் கருவடையும்.

இருந்தபோதிலும், இந்த மூன்று பொருட்களையும் செட் ஆக வாங்கிக்கொண்டு, அதில் அந்த skin milk மற்றும் moisturiser ’ஐ மட்டுமே தொடர்ந்து பயன்படுத்திவருவோம். toner ஐ மறந்துவிடுவோம். காரணம் toner போட மிருதுவான பஞ்சுவேண்டும். போட்டு சில நிமிடங்கள்வரை காத்திருந்து அந்தத் திரவம் காய்ந்த பின்பே மொட்சுரைசர் பின் பௌண்டேஷன் பூசவேண்டும்.

பரபரப்புச்சூழலில் ஓடிக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு, அந்தத் தோனர் காய்கிறவரை பொறுமை காக்க மறுப்பதால், தோனரை ஒரு பொருட்டாகக் கருதாமல் தூக்கிப்போட்டு விடுவார்கள்.
இதனாலேயே பல தோனர் பாட்டல்களை அதனின் expiry date வந்தவுடன் தூக்கி வீசிவிடுவது பல பெண்களின் வழக்கம். நானும் பல தோனர் பாட்டல்களை பயன்படுத்தாமல் அப்படியே வீசியுள்ளேன்.

இப்போது அதற்கு அவசியம் இல்லை.

அதாவது, முகத்தில் மேக் ஆப் போடுகிற பெண்கள், முகத்தை அலம்பி, skin milk கொண்டு தேய்த்து சுத்தம் செய்வார்கள். சிலவேளைகளில் அந்த ஸ்கீன் மில்க் முகத்தில் படிந்திருக்கின்ற மேக் ஆப்களை முழுவதுமாக அகற்றாது. அதனால் அகற்றவும் முடியாது, அதன் தன்மை வேறு. முகம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு பளபளவென்று இருந்தாலும், அந்த மேக் ஆப்கள் ஏழு எட்டு மணிநேரம் முகத்தில் படிந்து இருக்கும். பார்த்தால் தெரியாது, டிஷ்யூ கொண்டு துடைத்தால், துடைக்கத் துடைக்க தெரியும்.

அப்படிப் படிந்திருக்கின்ற அந்த முக ஒப்பனைகளை முழுமையாகத் தூய்மை படுத்தாமல், இரவில் படுக்கச்சென்று, காலையில் எழுந்து மீண்டும் முகஒப்பனை செய்கிறபோது ஏற்கனவே ஒட்டியிருக்கின்ற பழைய மேக் ஆப் களோடு புதிய மேக் ஆப்களும் கலந்து முகத்தைப் பாழ்படுத்தும்.

இதற்காகவே சில பெண்கள், அதற்கென்றே இருக்கின்ற make up remover வாங்கி வைத்துக்கொண்டு அந்த ஒப்பனைகளைச் சுத்தம் செய்வார்கள். மேக் ஆப் ரிமூவரும் மலிவு அல்ல. அதிக விலைதான். நல்ல பொருட்கள் எப்போதுமே அதிக விலைதான்.

ஆக, இந்தத் தோனரை மேக் ஆப் பேஸ் ஆகப் பயன்படுத்த சோம்பல் படுகிறவர்கள், அதை make up remover ஆகப் பயன் படுத்தலாம்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்கள், குளிப்பதற்கு முன், மிருதுவான பஞ்சுகளின் (cotton sponge) தோனரை நனைத்து, கண்மை, உதட்டுச்சாயம், பவுண்டேஷன், ஐ சேடோ போன்றவற்றை நன்கு துடைத்து எடுத்த பின், ஸ்கீன் மில்க் கொண்டு கழுவி சுத்தம் செய்யலாம். பார்ப்பதற்கு பளீச் சென்று இருக்கும்.

நீங்களும் அழகிகளே..