ஞாயிறு, அக்டோபர் 07, 2012

மூவின சமையலறை


கறிவேபில்லை வாசமென்றால்
என்ன கறிக்குழம்பா?

செராய் வாசமென்றால்
என்ன `ரெண்டாங்’ஆ?

டாவுன் பாண்டான் வாசமென்றால்
என்ன `நாசிக் லெமக்’ வா?

Yometsu மணமென்றால்
என்ன `பாக் குத் தே’ வா?

என்கிற பரிமாற்றங்களோடு
எங்களின் அக்கம் பக்க
சமையலறை உரையாடல்கள்..

கதையின் கரு


நிலத்தில் உதிர்ந்த பவளமல்லியில்
புனிதமேது அசுத்தமேது
நானறியேன்..
எடுத்து சேகரிக்கப்பட்ட
வழிப்போக்கனின் கூடையில்
மந்திரங்களை மட்டும்
உச்சரித்து விட்டுச்செல்கிறேன்
சேர வேண்டிய இடத்தில் சேரும்
என்ற நம்பிக்கையில்
யாரோ எழுதிய விமர்சனத்தில்
உன் கதையின் மூலக்கருவை
தேடுவதைப்போல
இறையடி சேரும்
மலர்களின் புனிதத்தன்மையை
தேடியபடி நான்...