ஞாயிறு, ஜூலை 29, 2012

பாறையும் கரையவேண்டுமே...

புள்ளி இல்லாமல், 
துணை கால் போடாமல்
இடைவெளி இல்லாமல்
பிழையோடு சொல்வதுபோல்
நடித்துவிட்டு
என் ஈகோவை சீண்டிச்செல்கிறது
உன் வாசகம்


%%%%%%


மண்ணில் விதைத்ததுதான் மரமாகுது
என மனமும் விளை நிலமோ
உன் நினைவுகளும் மரமாகுதே..!!


%%%%%%%


பேனா வாங்கினால் 
எழுதிப்பார்க்கின்றோம்
கத்தி வாங்கினால் 
வெட்டிப்பார்க்கின்றோம்
மொன்னையல்ல கூர்`மை’க்காக..!


%%%%%%


என்றோ ஒரு நாள் 
நடக்கவிருக்கும் அசம்பாவிதத்திற்காக, 
ஓயாமல் சிமிட்டிக்கொண்டே இருக்கின்றது; 
ரகசிய காமிரா..


%%%%%%%%


எனக்கு நேரமில்லை என்று சொல்லி 
பாராமுகமாக விலகிச் சொல்லலாம்.. 
என்ன செய்ய; நேரமிருக்கே.!


%%%%%%


எழுந்தவுடன் ஒரு சிக்கல்
சினத்தோடு சில வேலைகள்
படபடப்பு குறைந்தபோது
சமையல்
என் குழந்தைகளுக்கு (செடிகள்)
முடி,நகம் வெட்டுதல்
அவைகளோடு கொஞ்ச நேரம் 
கொஞ்சுதல்
தாழ்வாரத்தில் இறங்கிய 
சூரியனை துரத்திக்கொண்டே
மசாலா, துணிகள் உலரவைத்தல்
கவலை மறக்க ஒரு குட்டித்தூக்கம்
எழுந்து ஒரு கப் சூடான காப்பி
தனிமை மனதிற்கு சுகமளிக்கும் சில
கானங்கள்
ஷவரின் கீழ் அரை மணி நேரம்
வெளியூர் சென்றிருந்த கணவரின் வருகை
உல்லாச பொழுதாக்க
இரவு உலா செல்கிறோம்...
ஞாயிறும் சாய்கிறது..



%%%%%%%


நீ மெழுகாய்
உருகினாலும்
பாறை அது
கரையவேண்டுமே..!?



%%%%%%


புறக்கணிப்போம் 
என்கிற வாசகத்திலும் 
விளம்பரம் தெரிகிறது.


%%%%%%%


தோழியிடம்
தெரிந்த ஒன்றைப் பற்றி
கேள்வியாகக் கேட்பேன்
சொல்லிக்கொடுத்து
பூரித்துப்போவாள்
தோழமையில் நெருக்கம்
அவளைவிட அறிவில்
நான் குறைந்திருப்பது..



%%%%%%%


நன்றி 
பண்பின் வெளிப்பாடுதான்
எனக்கு அது வேண்டாம்
உன்னிடமிருந்து..
நன்றி


%%%%%



பற்றுதல்கள்

சிலர்
வாசனைப்பொருட்களின் மீது பைத்தியமாக இருப்பார்கள்
நமக்கு அருமையான மணம் இலவசமாகக் கிடைத்து விடுகிறது

சிலர்
செடிகளின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்
நமக்குப் பூக்கள் இலவசமாகக் கிடைத்து விடுகிறது.

சிலர்
சாமி பைத்தியமாக இருப்பார்கள்
கோவிலுக்குச்செல்லும் போதெல்லாம் நமக்கும் பிரசாதம் வீடு தேடி சுலபமாகக் கிடைத்து விடுகிறது.

சிலர்
உணவுப் பதார்த்தங்களின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்..
நமக்கு அதில் பாதி பலகாரங்கள் இலவசமாகக் கிடைத்து விடுகிறது

சிலர்
துணிமணி ஆடை அணிகலன்களின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்.
அவகளால்தான் ஏழைகளுக்கு இலவசமாக விலையுயர்ந்த ஆடைகள் கிடைக்கின்றன.

சிலர்
எழுத்துப்பைத்தியமாக இருப்பார்கள்
நமக்குக் கருத்துகள் எல்லாம் இலவசமாகக் உடனே கிடைத்து விடும்.

எதிலாவது பைத்தியமாக இருக்கனும், அப்போதுதான் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.

பைத்தியங்கள் தான் நல்லவர்கள்.
பற்றுப் பைத்தியங்களை கிண்டல் கேலி செய்யாதீர்கள் அவர்களால்தான் பலர் வாழ்கிறார்கள்.

இப்படிக்கு,
window shopper
விஜி.