வியாழன், ஆகஸ்ட் 16, 2012

மனிதவெடிகுண்டு..

பேசும் போது
வார்த்தைகளை
விழுங்கிவிடுகின்றேன்

எழுதும்போதும்
சொற்களின் இடையே
சூறாவளிதான்

உணர்வுகளை
மறைத்து மறைத்து
பழகிப்போச்சு

உள்ளே காத்திருக்கின்றது
தனலாய்
ஒரு எரிமலை