புதன், ஜூலை 11, 2012

வெட்டிவேலை


நாய்

நீ வீசுகிற
எலும்புகளுக்கெல்லாம்
வால் ஆட்டவேண்டுமென்றால்
என்னை நாயாக அல்லவா
படைத்திருப்பார்
அந்த இறைவன்.

%%%%%

ஏக்கம்

சட்டியில் பிரட்டிய
சட்டிச்சோற்றின்
இறுதி பருக்கை
கையில் தொட்டு
நாக்கில் வைக்கும் போது
நன்றி சொல்கிறேன்
அம்மாவின் சமையலுக்கு

%%%%%%

அவசரம்

`கிளம்புங்க.. கிளம்புங்க
என்று கணவனை
ஓட்டும் பெண்கள்
அவன் கிளம்பிய பிறகும்
கிளம்பாமல்
பல வருடங்களாக...

%%%%%%

இழக்கமனமில்லை

பேச்சில் சுவாரிஸ்யமில்லை
இடையிடையே
உப்பு எனவும்,
ஜாங்கிரி எனவும்
மாங்காய் எனவும்
காரம் எனவும்
கற்றாலை எனவும்
வலுக்கட்டாயமாக
சேர்த்துக்கொண்டிருக்கிறேன்
உன்னையும் இழக்க மனமில்லாமல்.....

%%%%%%%

மனப்பதிவுகள்

பதிவிடும் தருணங்களில்
தோன்றித்தோன்றி
மறைகின்றன
காகிதத்தின் வென்மைக் கோடுகளாய்
மனப்பதிவுகள்
கண்கள் சிமிட்டப் படும்போது
கருத்துக்களும் இல்லாமல்
காகிதங்களும் இல்லாமல்..
வெரித்துக் கொண்டிருக்கிறேன் 
வெறுமையை

%%%%%%

அமைதியாய்.

நீ என்னைப் பின் தொடரும் தருணங்களில்
உன்னால் பொறுக்கப் படும் கற்களை 
நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். 
நமது இடவெளி நீளும் போது
நீ எறிகின்ற கற்களால் 
எனக்குச் சேதம் வராமல் 
என்னை நான் தற்காத்துக் கொள்ள 
கவசம் தேடிக் கொள்கிறேன்.. 
மௌனப் புன்னகையில்...

%%%%%%


பால்யதோழி

நீண்ட நாள் சந்திக்காத
என் ஒத்த வயது பள்ளித்தோழி
ஒரு திடீர் சந்திப்பில்
அப்படியே பார்த்த மாதிரியே இருவரும்..
கையில் குழந்தையோடு..
உன் குழந்தையா?இல்லை, பேரக்குழந்தை..
விடைபெறும் போது
`
பாட்டிக்கு டாட்டா சொல்லுஎன்னையும் பாட்டியாக்கினாள்
பதினைந்து வயதிலே அம்மாவான அவள்....

%%%%%%

சின்னச் சின்ன
சீண்டல்களையும்
ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்
என்னோடு உனக்கென்ன 
வெட்டி வேலை ?

இணைய முத்தம்

உணர்வே இல்லாத
உன் `உம்ம்மா’ விற்காக
நிஜமாக துடிக்கத்தான் செய்கிறது
என் இதயம்