செவ்வாய், மே 22, 2012

இரவும் இரையும்

ஜன்னலின் அருகே
இராப்பிச்சை தொனியில்
மறைந்து எட்டிப் பார்க்கும்
ஒரு பூனை

சாமி படங்களுக்குப் பின்னால்
காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு
ஒளிந்திருக்கும் ஒரு எலி

கதவின் ஓரம்
பதுங்கிக் கண்காணிக்கும்
ஒரு தவளை

கட்டில் இடுக்குகளில்
ஓசை படாமல்
மீசையை ஆட்டிக்கொண்டிருக்கும்
ஒரு கரப்பான்பூச்சி

சுவர் கடிகாரத்தின் ஓரம்
சப்பைக்கட்டிக் கொண்டு
சகாக்களுக்கு சமிக்ஞை
கொடுக்கும் பல்லி..

யாருக்கு யார்
இரையோ..!?

ஆனால்,
இவைகளுக்கும் அவஸ்தைதான்
இரவில் நான் படுக்கச்செல்லாமல்
உலாத்திக் கொண்டிருந்தால்