வெள்ளி, மார்ச் 02, 2012

கடை சாப்பாடு

வெறும் புளியின் சார் - ரசமாம்
பருப்புக் கலவை, கொஞ்சம் மஞ்சளாக - சாம்பார் என்கிறார்கள்
கோழியின் காலகள் மிதக்கின்ற நீர் - கோழிக்குழம்பு
வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளிய
பெரிய பெரிய மீன் தலைகளின் கலவை - மீன்குழம்பு
குருவிக்கு உணவாக வைத்திருக்கும் அரிசியில் பொங்கிய - சோறு...
அதிலும் ஒரே ஒரு மயிர் இருந்து விட்டதால்
அருவருப்பாகி துக்கிப்போட்டுவிட்டு வந்துவிட்டேன்..
காலையில் கிண்டிய புளிசாதம் -
பஞ்சாமிர்தமாய் இன்னும் அதிக சுவையுடன்...

.?

எதற்குமே
விடைகொடுக்காமல்
கேள்வியாகவே
இருக்கின்றாய்
உன்னை நான்
தொடரவேண்டும் என்பதற்காக.?

உயிரின் ஓசை

ஒவ்வொரு முறையும்
விழுங்கப்படுகின்ற மாத்திரைகள்
தொண்டையத் தாண்டி
இதயத்தை வருடிச்செல்லும் போது
நம்பிக்கை ஜீவிக்கிறது
ஆயுளாய்