செவ்வாய், டிசம்பர் 20, 2011

சுயம்

நம்மிடம்
கொடுப்பதற்கு
அன்னை தெரெசா போல்
எதிர்ப்பார்ப்பற்ற
அன்பும் இல்லை

அழகாய்
எப்போதும் பளிச்சென்று இருக்க
ஹாலிவூட் நாயகியும் அல்ல

நினைத்த மாத்திரத்தில்
உலகை வலம் வரும்
கோடீஸ்வரரும் அல்ல

கவர்ச்சிப் புயலாய் கலக்க
உடல் வாகும் இல்லை
முகவெட்டும் இல்லை

அறிவாளி என்பதற்கும்
எந்த சரக்கும் இல்லை

ரசனையின் லட்சணமும்
இங்கே வெட்டவெளிச்சமாக..

குழந்தைபோல்
கள்ளங்கபடமில்லாமல்
கள்ளத்தனம் மிகுந்தவர்களாய்..

கம்பீரமென்றால்
அதுவும் கம்மிதான்
வழிகிறபோது...

எதற்குக்கோபப்படனும்
எதற்குச் சிரிக்கனும்
எதற்கு அழனும்
என்பது கூட தெரியாமல்

சதா
வாயால் வடை சுடும்
நோயாளிகளான நம் மீது

கடவுளின் குழந்தைபோல்
கரிசனம் காட்டுபவர்களை
காதல் என்றெண்ணி
வதைக்கலாமா?



ஆண்பால்

அன்பு வைக்கிறேன் பேர்வழி
என கிளம்பி விடாதே..!
அவர்கள் (அவன்கள்) நினைத்த மாத்திரத்தில்
தாய் மடியில் படுத்து
தாரத்தின் மடியில் பால் குடிக்கும்
பச்சைக் குழந்தைகள்..
உன் அன்பு, அங்கே எந்த மாற்றத்தையும்
கொண்டுவந்துவிடாது
வீணாய் ஏமார்ந்துபோகாதே....!

தவிப்பு

எல்லாக் கால நேரத்தில்
நான் உன்னுடனேயே
என்பதைக் காட்ட நினைக்கும் போது
எனக்குள் தான் எவ்வளவு தவிப்புகள்..!?