வெள்ளி, டிசம்பர் 16, 2011

பேசாதே...

தைரியமிருக்கா
என்னோடு பேச..?
பேசு..
என் மனம்
இந்தத் தொகுப்பை
பதிவு செய்துக்கொண்டே
உன் மன ஓட்டத்தை
ஆராய்ந்துக் கொண்டிருக்கும்

கருத்து

உன்னுடைய நியாயங்களைச் சொல்வதற்கு, நீ ஒன்னுமே விவாதிக்க
வேண்டாம், உன் மௌனம் நல்ல பதிலடியாக இருக்கட்டும்.

விவாதிக்க முடியாத கருத்துக்கள் கேள்விகளாக, விடையே கிடைக்காமல் உள்ளக்கிடக்கில் அமுக்கி அமுக்கி... பெண் என்பதால் காதலோடும் காமத்தோடும் உடலும் புதைக்கப்படுகிறது

ஒரு ஆணின் மேல் கொண்ட காம இச்சையால், ஒரு பெண் செய்யும் அசிங்கமான வேலைகளைப் பட்டியலிட்டால்.. பெண்குல நாசமாக்கி என்கிற பட்டம் எனக்கு வந்தாலும் வரும்..எதிர்காலத்தில்.

இப்போது எனக்கு மிக ஆபாசமான வார்த்தையாகப்படுவது “நான் ஒரு ஆன்மிகவாதி”

ஒரு பெண்ணின் அழைப்பிற்கு ஏங்கும் ஒரு ஆணின் நிஜக்கனவு, அவளின் அதரங்கள் மற்றும் கொங்கைகள்

வயசை மறைத்து, புருவத்தை தீட்டி, ஆடை, அலங்காரம் அணிகலன்  எல்லாம் பூண்டு,  தலுக்கி மினுக்க நினைக்கும் நாமெல்லாம், சோரம் போன, ஒரு பெண்ணைப்பற்றிப் பேச அருகதையற்றவர்கள். அவள் வெளிப்படையாக செய்கிறாள்..நாம் போலி அலங்காரத்தில் அதை மறைத்து வைத்திருக்கிறோம்.

வயசை மறைத்து, புருவத்தை தீட்டி, ஆடை, அலங்காரம் அணிகலன்  எல்லாம் பூண்டு,  தலுக்கி மினுக்க நினைக்காத பெண்மட்டும் பேச்லாமா?

நிச்சயம் அவள் பேசமாட்டாள், ஏன்னா, நாம், நம்மை வைத்துத்தான் உலகத்தைக் காண்கிறோம்.

மறைத்துவைத்த ஓலம்

நிறைவாக
நுணுக்கமாக
பொறுமையாக
நிதானமாக
மென்மையாக
அழகாக
மெதுவாக
சுவாரஸ்யமாக
ரசனையோடு

“செய்....”

ஆர்வைத்தை ஒர் ஓரமாக வைத்துவிட்டு

ஒளிக்கீற்று

இன்னும் உதிக்காத
சூரியனின் வருகைக்காக
ஏற்கனவே மலர்ந்து விட்ட மலர் போல்
நானும் உன் வருகைக்காக..!