ஞாயிறு, அக்டோபர் 07, 2012

கதையின் கரு


நிலத்தில் உதிர்ந்த பவளமல்லியில்
புனிதமேது அசுத்தமேது
நானறியேன்..
எடுத்து சேகரிக்கப்பட்ட
வழிப்போக்கனின் கூடையில்
மந்திரங்களை மட்டும்
உச்சரித்து விட்டுச்செல்கிறேன்
சேர வேண்டிய இடத்தில் சேரும்
என்ற நம்பிக்கையில்
யாரோ எழுதிய விமர்சனத்தில்
உன் கதையின் மூலக்கருவை
தேடுவதைப்போல
இறையடி சேரும்
மலர்களின் புனிதத்தன்மையை
தேடியபடி நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக