வெள்ளி, நவம்பர் 18, 2011

ஒழுக்க சிந்தனையும் நாமும்

ஒழுக்கத்தைப்பற்றி, அன்றும் சரி, இன்றும் சரி நமது உயர்ந்த சிந்தனையில் உதித்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவனிடம்/ஒருவளிடம் சென்று உடலுறவு (காதல்/கள்ளக்காதல்) வைத்துக்கொள்வது மட்டும்தான் என்பதைப்போல் ஆகிவிட்டது நிலை.! 

ஒழுக்கமின்மையைப்பற்றி 100 காரணங்கள் இருந்தால், அதில் இந்த செய்கை நடுவிலோ அல்லது இறுதியிலோ தான் இருக்கும். முதலில் இருக்க வேண்டிய பல ஒழுக்கச்சீர்கேடுகள் நிறைய இருப்பினும், இதை மட்டும் பிடித்துகொண்டு, ஒருவரது அந்தரங்கத்தை ஆராய்ந்து, அவனுக்கு ஒழுக்கமில்லை, அவளுக்கு கற்பில்லை என இன்னமும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது நமக்கெல்லாம் ஒரு சுவாரிஸ்யமான பொழுது போக்கு.! ஏன் இப்படி?? இலகுவாக புண்படுத்தலாம் என்பதாலா? விரும்பிச்செய்கிறவனும் பெண் மீது பழிபோட்டு தப்பிக்கப்பார்க்கும் சமூகமிது. எச்சரிக்கை!!!

கண்ட இடத்தில் காரி துப்பிக்கொண்டு,காது குடைந்துக்கொண்டு வேலைக்குப் போகும் பெண்களின் ஒழுக்கத்தைப்பற்றி பேசுகிறவனை முதலில் ஜெயிலில் போடவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக