வெள்ளி, ஜூன் 29, 2012

மன நோய்

முகநூலில் என் கேள்விக்கு எனது அன்பான நண்பர்கள் பகிர்ந்த ஒர் தொகுப்பு இது.  

மனநோய் ஏன் வருகிறது?

நான் நினைக்கிறேன், தன்னைப்பற்றி ஊர் உலகம் என்ன சொல்லும் என்கிற சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்குத்தான் மனவியாதி வரும் போலிருக்கிறது. காரணம் அவர்கள்தான் ஊர் உலக அங்கீகாரத்திற்காக நடிப்பவர்கள்.


குட்டிப்பிசாசு - பகிர்வு
இப்படி தலைப்பு போட்டு கொண்டு இருப்பதாலும், அதை படித்து கொண்டே இருப்பதாலும்


மணிவண்ணன் கோவிந்தராஜ் - பகிர்வு
மனசு இருப்பதால்


பின்னம்பாக்கம் நித்யாநந்த குருமூர்த்தி - பகிர்வு
Thevaiye illaama sindhanai panna ellaa viyaadhiyum varum kkaa...Nallaa rest edunga...

குட்டிபிசாசு - பகிர்வு
அக்காவ எல்லாரும் மனநோயாளியாவே ஆக்கிட்டீங்களேய்யா


இளங்கோ சக்திவேல் - பகிர்வு
இந்த கேள்வியை சீரியஸா எடுத்துக்கிறதா, காமெடியா எடுத்துக்கிறதா? 
 மனநோய்க்கான காரணங்கள் சில.
மன அழுத்தம்,
தனிமை (கூட்டத்தில் இருக்கும் போதும் தனித்திருப்பது),
அன்புக்கு ஏங்குதல், ஏமாற்றம் போன்றவை.

சில நேரங்களில் குட்டிப்பிசாசு போல பேசுபவர்களால் எதிராளிக்கும் மனநோய் வரலாம்.
நான் கேள்விப் பட்டதையே எழுதி உள்ளேன். அதிக விவரங்களுக்கு வலையில் தேடலாமே தோழி.

மதுரை கண்ணன் - பகிர்வு
 நல்லதோ , கேட்டதோ அதிகமாய் பலவீனப்படும்போது ...


ஜெய்லானி - பகிர்வு
‎//மனநோய் ஏன் வருகிறது?// டாக்டருக்கு வேலை இல்லாமல் போய்டும் அதனால் வருது :-)


சதிஷ் ராகுல்
உங்களின் status படிப்பதால்


அந்தோணிராஜ் -பகிர்வு 
உடல் ஆரோக்கியம் போல தான மன ஆரோக்கியமும் உடலை சரியாக பார்த்து கொள்ளாவிட்டால் வியதிகள் தானே வரும் அது போல தான் மனமும்.ஆனால் கடவுள் பக்தி கொண்டவர்களுக்கு மன நோய் வரும் சாத்தியம் மிக மிக குறைவு நல்லதோ கெட்டதோ அங்கே சரணடைந்தால் இல்லை மன நோய்.


K.R.விஜயன் - பகிர்வு
தேவையில்லாத சுமைகளை மனதில் பராமரித்துக்கொண்டிருப்பதால்........ take it easy policy இருந்தால் ஒரு நோயும் வராது. சிரிங்க.............சிரிங்க................சிரிச்சிக்கிட்டே இருங்க அடுத்தவங்க ஒரு மாதிரி பார்த்து கையில் கல்லை தூக்க ஆரம்பித்தவுடன் நிறுத்திடுங்க.......


ஸ்மிலி பிரபு திருச்சி - பகிர்வு
பெரும்பாலும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இது அமைந்தாலும்., உன்மையில் ஒருவன் தான் விரும்பியதை சிந்திக்க இயலாமல் சில விஷயங்களால் கட்டுப்படுத்தப்படும் பொழுது சுதந்திர தன்மையை இழந்த மனம் முதலில் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாகி இருதியில் மன வியாதியாக உருமாறுகிறது..


 மனிதன் எப்பொழுதும் தான் சுதந்திரமாக இல்லாவிட்டாலும் தன் என்னங்களை சுதந்திரமாக அலைய விட நினைப்பான்.. அதாவது கஷ்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு நல்ல சந்தோஷமான வாழ்வை கற்பனை செய்து கொண்டு நாமும் சந்தோஷமாய் வாழ்வோம் என்று நம்பிக்கையுடன் வாழ்வான். எப்போது இந்த சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அப்போது அவனுக்கு நம்மால் வாழ முடியாது, நம்மால் யாருக்கும் யாதொரு பயனும் இல்லை என்ற அச்சம் தோன்ற ஆரம்பிக்கிறது, இதுவே மன நோயின் முதல் படி !

சங்கரலிங்கம் விநாயகம்
pengalaal perbaalum...


ஸ்டீல்ஸ் குமார்
appaa........ ippavavathu itha ketkanumnu thonuche!!


பின்னம்பாக்கம் நித்யானந்த குருமூர்த்தி - பகிர்வு 
ஒரு மனிதன் ஒரு காரியத்தை பற்றி நினைக்கும்போதே, அது சரியாக வந்தால் நல்லது, இல்லையென்றால் ரொம்ப நல்லது என்ற மனோபாவத்துடனேயே ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஏமாற்றமும் தன்னை பாதிக்காத வகையிலே தன் மன நிலையை வைத்துருந்தால்,மனம் சம்பத்தப்பட்ட எந்த அழுத்தமும் வராது சிஸ்டர்.


கவலை இல்லாம்ல் இருந்தால் வராது..


ஸ்ரீவிஜி சொன்னது
இதை அப்படியே ப்ளாக்கில் போடுவேன்.... உங்களின் பின்னூட்டங்களோடு.




சதிஷ் ராகுல்
நல்லது... அப்படியே white லயும் போடுங்க சதிஷ்  

அசைவம்


ஏய் எறும்பே..
சக்கரைக்கு ஆசைப்பட்டு
சுடுநீரில் வெந்து சாகிறாயா!?..
வெள்ளிக்கிழமையும் அதுவுமா
என்னை கொலைக்காரியாக்கி
அசைவ காப்பி
அருந்தவைத்து விட்டாயே.!

வியாழன், ஜூன் 28, 2012

பால்ய தோழி

அக்கா
அண்டி
அம்மா
மேடம்
மிஸ்
சகோ
தோழி
ப்ரெண்ட்
எங்கோ
விஜி.. என 
யார் அழைத்தாலும்
``ஏய், ஏம் புள்ள வீணா கண்டதையெல்லாம்
நெனச்சு கொளம்பிக்கறவ..?’’
அப்படின்னு சொல்ற ஒரே ஒரு ஆரம்பப் பள்ளி தோழி இருக்கா உங்களுக்கு இன்னமும்!?
நீங்கள் கொடுத்து வைத்தவர்..

புதன், ஜூன் 27, 2012

காப்பி நேரம்


இன்று காலையில் கணவரிடம்  பேசிக்கொண்டிருந்த போது (காப்பி நேரம்)  முட்டாள்தனமான ஒரு விவரத்தை வீர செய்கை போல் என்னிடம் பகிர்ந்தார்.

நண்பரின் மகன் 13வயது, அவனுடைய நண்பர்களோடு சேர்ந்து சிகரெட் புகைக்கும் போது கையும் களவுமாக பிடித்து விலாசு விலாசென்று விலாசி விட்டாராம் நண்பர்... அந்த பையனை எனக்கு நன்கு தெரியும். நல்ல மரியாதையான பையன். தலைக்கு மேல் வளர்ந்த பையனை இப்படியா அடிப்பது.! (கூர்ர்ர்ர்....)

ஏன் இன்னமும் இப்படி செய்கிறார்கள் நம்மவர்கள்?

நானும் தான் என் மகன் அந்த வயதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் போது பார்த்துவிட்டேன். கையும் களவுமாகப்பிடித்து விட்டேன்.

என்ன சொன்னேன் தெரியுமா?

ஐயா, எல்லோருக்கும் இதுபோன்ற ஆசை வரும், அம்மா கூட உன் வயதில், பாட்டி வைத்திருந்த சுருட்டை புகைத்து சுவைத்தேன்.. இருமல் வந்தது.. பிறகு அதைத் தொடவே இல்லை.

எல்லாவற்றையும் பழகிப்பார்க்க ஆசை வரும், தப்பில்லை ஆனால் தொடராதே, உடல் நலக்கேடு. என்றேன். அவ்வளவுதான்.

இன்று கூட அவனின் நண்பர்களுக்கு அந்த பழக்கம் இருக்கின்றதாம் ஆனால் அவனுக்கு இல்லை. இப்போ பதினெட்டு வயது இளஞன் அவன்.

பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, அந்த வயதில் நாம் என்ன செய்தோமென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.!

இவனுங்க உலகத்தில் உல்ல அனைத்து அயோக்கியத்தனத்தையும் செய்வானுங்க.. பிள்ளைகள் அப்படியே பொம்மை மாதிரி வளரனுமாம்..
என்ன நியாயம்!

அடித்தால் இன்னும் மோசமாகும் நிலைமை. வெளியுலகம் சென்றுவிட்டால், சுய ஒழுக்கம்தான் பாதுகாப்பு. அதற்கு பெற்றோர்களின் பங்கு என்ன? நாம் சரியான வழிகாட்டியாக இருந்துள்ளோமா!?

வாய் விட்டு சிரித்தேன்

இன்று நான் படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்த ஒரு எழுத்துப் பதிவு.

``ஏன்ய்யா, உங்கள் எழுத்தாளர்களுக்குள் ஏன் இத்தனை அக்கப்போர். ’’

செவ்வாய், ஜூன் 26, 2012

அசைந்தாடி



நான் ஒரு செடி வளர்க்கின்றேன்
கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக
ஒரு செடியின் சிறிய கிளை அது.
அதன் வளர்ச்சி
ஒரு குழந்தையின் வளர்ச்சி போல்
அசைந்தாடி அசைந்தாடி
கொஞ்சம் கொஞ்சமாக..
என் நிலையை பிரதிபலிக்கும்
மகிழ்ச்சி என்றால்
அது மலரும்
சோகமென்றால்
அது வாடும்
என் கோபம்
என் விரக்தி
என் காதல்
என் ரகசியம்
என் சூழ்ச்சி
என் வஞ்சகம்
எல்லாம் தெரியும் அதற்கு
இன்றும் என்னோடுதான்
இப்போது அதனருகில் நான்
என் நிலையை கவனித்துக்கொண்டு
இன்று என் உயரத்திற்கு வளர்ந்து விட்டது
என்னை விட வளரும்
இன்னும் இன்னும் இன்னும்
அதனால் நிறுத்திவிட்டேன்
அதன் முன் நாடகமாடுவதை..

பஃக் சங் (Bak Chang)

நான் மலேசியர், மூவினங்களோடு வாழ்வதால், எல்லா இனப் பண்டிகைகளும் எங்களுக்குக் கொண்டாட்டமே.

மலாய்க்காரரகளின் (முஸ்லீம்) முக்கிய பெருநாட்கள் இரண்டு. ஒன்று ரமலான் மற்றொன்று ஹஜ்ஜிப் பெருநாள். அந்த நாட்களில் பலவிதமான பலகாரங்கள் தின்பண்டங்கள் தயார் செய்து அண்டை அயலாரோடு பகிர்ந்து உண்பார்கள். பெரும்பாலும் ஒன்று கூடிய வழிபாடுதான் அவர்களின் விஷேச நாட்களில் முக்கிய நிகழ்வு.



நம்மவர்களின் விஷேசங்கள் என எடுத்துக்கொண்டால், வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் வடை பாயசத்தோடு விருந்து என்பது அங்கே மறுக்கமுடியாத ஒன்றாகும். ஒரே மாதிரியான ஒரே விதமான பலகாரங்களை பரிமாறி உண்பது வழக்கம். உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் வடை பாயசத்தோடு இலையில் விருந்துண்பதென்பதுவே விஷேசம்தான். அதுவே முழுமையான விருந்தாக மனதிருப்தியைக் கொடுத்துவிடுகிறது.



ஆனால் சீனர்களை எடுத்துக் கொண்டீர்களென்றால், அவர்களுக்கும் நம்மைப்போல் மாதம் ஒரு முறை விஷேச திருநாள்கள் வரும். அந்த விஷேச திருநாளில் கோவில் வழிபாடு என்பது ஒருபுறமிருந்தாலும், அதற்கென்றே பிரத்தியேகமான ஒரு பலகாரம், பிரதான பலகாரமாகத் திகழ்ந்து, அந்த விஷேச நிகழ்வின் போது அந்த பலகாரமே பிரபலமாகப் பேசப்பட்டும். அந்நாளில் அப்பலகாரம் எல்லா இடங்களிலும் விற்பனைக்கு வருவது இயல்பான ஒன்று.  அந்த நாளைத் தவற விட்டால், அப்பலகாரம் மிகுந்த சுவையுடன் சிறப்பானது கிடைக்காது என்பார்கள் சீனர்கள். (கிடைக்கும் ஆனால் சாதாரணமானதுதான் கிடைக்கும்) ஆக, கிடைக்கின்ற நாட்களிலே சாப்பிட்டுக்கொள்ளவும் என, அவ்விஷேச நாட்களின் போது, வருவோர் போவோரெல்லாம் அந்த பிரத்தியேக பலகாரத்தை கையோடு கொண்டுவந்து கொடுத்து நம்மை திக்குமுக்காடச் செய்துவிடுவார்கள்.



முடிந்த சனியன்று, பஃக் சங் என்கிற ஒரு பெருநாளைக் கொண்டாடி முடித்திருந்தார்கள் சீன சமூகத்தினர். அதற்கு முன்பே அப்பெருநாளில் சிறப்பாகப் பேசப்படும் `சங்’ என்கிற பலகாரம் பற்றிய தகவல்கள் எல்லா பத்திரிகைகளையும் அலங்கரித்த வண்ணமாக இருந்தது.

எப்படிச் செய்வது? எப்படி அலங்கரிப்பது? அதன் இலையை எப்படி மடிப்பது? சைவ அசைவ சங் செய்யும் முறைகள்? வயதான மூதாட்டி காலகாலமாக செய்து வரும் சங்’யின் சிறப்பு பற்றிய பேட்டி, இன்றைய தலை முறையினருக்கு சங் செய்யும் எளிய வழிமுறைகள் என, தினமும் இதையொட்டிய தகவல்கள் பத்திரிகையை அலங்கரித்தன. இன்று கூட ஒரு செய்தி; சங் தயாரிக்கும் போட்டியில், மாணவர்கள் பங்கு கொண்டு வெற்றி பெற்ற நிகழ்வை புகைப்படங்களோடு நடு பக்கத்தில் முழுமையாக பிரசுரமாகியிருந்தார்கள்.


 இதுதான் பஃக் சங்

இதை, நேற்றிலிருந்து எனக்குக் கொடுத்த வண்ணமாக இருக்கின்றார்கள் இங்கே உள்ள சில சீனத் தோழிகள். அந்த உணவின் சுவையை சொன்னால் புரியாது, சாப்பிட்டுப்பார்த்தால் தெரியும். அற்புதம். பெரும்பாலும் அவற்றில் பன்றி இறைச்சியை சேர்த்திருப்பார்கள், ஆனால் எனக்கு சைவமாக தயாரித்ததைத் தான் கொண்டுவந்து கொடுப்பார்கள்.  இங்கே எங்களுக்கு (தமிழர்கள்) இதுதான் பெரிய சிக்கல். மலாய்க்காரர்கள் என்றால் மாட்டிறைச்சி இருக்கும், சீனர்கள் என்றால் பன்றி இறைச்சி இருக்கும். இதனாலேயே சில விஷேசங்களுக்கு தமிழர்களை அழைத்தாலும் செல்லமாட்டார்கள். நம்மவர்களின் விருந்து என்றால் இருதரப்பினருக்கும் கொண்டாட்டம்.

இந்த பஃக் சங் பலகாரத்தை காலையிலேயே சுவைத்தவுடன், மதியம் வரை பசி எடுக்கவில்லை. Glutinous  அரிசியைக்கொண்டு தயார் செய்து, மூங்கில் இலையில் மடித்து மணக்க மணக்க அதிகமான தாணியங்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சங், ஒன்று சாப்பிட்டாலே போதுமானது.



அதை எப்படி தயார் செய்வது என சில சீனத்தோழிகளிடம் கேட்டேன்.. “உனக்கு எதுக்கு? நாங்களே கடையில் வாங்கித்தான் சாப்பிடுவோம், தயாரிப்பது பெரிய வேலை, ரொம்ப கஷ்டம். எங்க பாட்டி காலத்தில் செய்வார்கள்.. இப்போ எங்கே..!!!?” என பெருமூச்சு விடுகிறார்கள்.

சீனர்கள் உணவிலேயே நான் மிகவும் விரும்பிச்சாப்பிடுவது இந்த பஃக் சங் தான்.

ரெசிப்பி வேண்டுபவர்கள், இதைச் சொடுக்கவும்

http://www.soshiok.com/article/19483