திங்கள், ஜூலை 02, 2012

விளிம்பினிலே...

படிப்பதற்கே பொழுதில்லை
பாதிப்பொழுது பணியிடத்தில்
மிதிப்பொழுத்து குடும்ப சிக்கலில்
பார்வையெல்லாம் பெருமூச்சாய்..
நிறைவேறா ஆசைகள் ஒரு பக்கம்
சினிமா காட்டும் புதுமைப் பெண்களிடம்
சில குறிப்பு..
இயக்குனர்கள் சொன்ன வசனங்கள் சில
பக்கத்து வீட்டுப்பாட்டியிடம் சில கதை
கொஞ்சம் ஊர்கதை
தத்துவங்கள் சில
அறிவுரைகள் பல
ஆங்காங்கே திருக்குறளையும்
சேர்த்துக்கொள்ளலாம்..
கால்களில் சக்கரங்கள்...
செயற்கை இறக்கைகளோடு
மிதமிஞ்சிய கற்பனையில்
இலக்கியவானில் மிதந்துகொண்டிருக்கும்
தொடர்கதை பாவைகள்
விட்டுச்செல்கின்றனர்
எச்சங்களை மிச்சமாய்..                                                                               

ஞாயிறு, ஜூலை 01, 2012

சேகரிக்கப்பட்ட தருணங்கள்

அடிபட்ட கரப்பானை
அடக்கம் செய்தன
எறும்புகள்

%%%%%

சதை வெந்துவிட்டது
இரத்த வாடை தான் இன்னும் போகவில்லை
விருந்துக்கு நேரமாச்சு..

%%%%%%

உறவுகளால் பேசப்படும் 
திருமணம். 
ஒரு பெண் செய்யும் 
மறுமணம்.

%%%%%

ஒரு மயில்
ஒரு மையில்
ஒரு மைல்
ஒருமையில்

%%%%%%%%

திட்டம்போட்டு யதார்த்தமாக
செய்யப்பட்ட ஒரு கொலையில்
நானும் கூட நடைபிணமே.!

%%%%%%

அசையாமல் 
அமர்ந்திருந்தால் 
நம் மீதும் 
ஈ மொய்க்கிறது.

%%%%%%

காலையில் எழுந்தவுடன்
கடிகாரம் பார்ப்பதுபோல
சூரியனை எட்டிப்பார்ப்பதைபோல
சூடாக ஒரு கப் காப்பி அருந்துவதைப்போல
வழக்கமாகிவிட்டது
இணைய உலா.

%%%%%%%%

நீந்த முடியாத மீன் முள் 
நடந்துச்சென்றது
மேஜைக்கடியில்..

%%%%%%

இரவெல்லாம் உறக்கமில்லை
ஏன் என்று கேட்டால்
ஒண்ணுமில்லை என்கிற
பொய் கலந்த உண்மையை 
சொல்லவேண்டிவருமே.!

%%%%%%%

ஒரு புத்தகத்தில் 
நுழைகின்ற போதெல்லாம்
உள்ளே, நான் இருக்கின்றேன்
என் பின்னே நீயும் வருகின்றாய்..

%%%%%%%%

காய்ந்துப்போன செடியில் 
ஒட்டிக்கொண்டிருக்கும் 
ஒரே ஒரு பச்சை இலையால், 
என் நம்பிக்கை சாய்ந்து விடவில்லை, 
தினமும் வேர்களை நோக்கி
நீர் பாய்ச்சியவண்ணம்
நான்..

%%%%%%%%%

கதை படித்தால்-கதையாக
கட்டுரை படித்தால் -கட்டுரையாக
துணுக்குகள் படித்தால்-துணுக்குகளாக
மாறிவிடும் நான்..
கவிதை படித்தால் மட்டும் 
நீயாகிப்போகிறேன்..

%%%%%%%

கீரையின் நடு நரம்பெடுத்து
வெங்காயத்தை துகிலுறித்து
வெள்ளப்பூண்டில் தோலுறித்து
மிளகாயை மொட்டையாக்கி
கத்தரிக்காயின் கழுத்தறுத்து
கொதிக்கும் எண்ணெயில் வதக்கி
கடையப்போகிறேன் புளிச்சக்கீரையை.

%%%%%%%%

முத்தமிட்டுக்கொண்டே இருந்தால், 
மழலைகூட 
வன்முறையைக் காட்டி, 
விலகி நிற்கும்.

%%%%%%%

நாளை நான் இல்லாமல் போகலாம் 
இன்று என்னால் சேகரிக்கப்படும்
இந்த தருணங்கள் வாழும்போது
இந்த வருகையும் அர்த்தமாகிவிடுமல்லவா!

%%%%%%%

அடிக்கிற வெயிலில்
ஆட்டிஃபிஷல் மலர் கூட 
வாடிவிடும்போது
எம்மலர் எம்மாத்திரம்!?

%%%%%%%

வெள்ளி, ஜூன் 29, 2012

மன நோய்

முகநூலில் என் கேள்விக்கு எனது அன்பான நண்பர்கள் பகிர்ந்த ஒர் தொகுப்பு இது.  

மனநோய் ஏன் வருகிறது?

நான் நினைக்கிறேன், தன்னைப்பற்றி ஊர் உலகம் என்ன சொல்லும் என்கிற சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்குத்தான் மனவியாதி வரும் போலிருக்கிறது. காரணம் அவர்கள்தான் ஊர் உலக அங்கீகாரத்திற்காக நடிப்பவர்கள்.


குட்டிப்பிசாசு - பகிர்வு
இப்படி தலைப்பு போட்டு கொண்டு இருப்பதாலும், அதை படித்து கொண்டே இருப்பதாலும்


மணிவண்ணன் கோவிந்தராஜ் - பகிர்வு
மனசு இருப்பதால்


பின்னம்பாக்கம் நித்யாநந்த குருமூர்த்தி - பகிர்வு
Thevaiye illaama sindhanai panna ellaa viyaadhiyum varum kkaa...Nallaa rest edunga...

குட்டிபிசாசு - பகிர்வு
அக்காவ எல்லாரும் மனநோயாளியாவே ஆக்கிட்டீங்களேய்யா


இளங்கோ சக்திவேல் - பகிர்வு
இந்த கேள்வியை சீரியஸா எடுத்துக்கிறதா, காமெடியா எடுத்துக்கிறதா? 
 மனநோய்க்கான காரணங்கள் சில.
மன அழுத்தம்,
தனிமை (கூட்டத்தில் இருக்கும் போதும் தனித்திருப்பது),
அன்புக்கு ஏங்குதல், ஏமாற்றம் போன்றவை.

சில நேரங்களில் குட்டிப்பிசாசு போல பேசுபவர்களால் எதிராளிக்கும் மனநோய் வரலாம்.
நான் கேள்விப் பட்டதையே எழுதி உள்ளேன். அதிக விவரங்களுக்கு வலையில் தேடலாமே தோழி.

மதுரை கண்ணன் - பகிர்வு
 நல்லதோ , கேட்டதோ அதிகமாய் பலவீனப்படும்போது ...


ஜெய்லானி - பகிர்வு
‎//மனநோய் ஏன் வருகிறது?// டாக்டருக்கு வேலை இல்லாமல் போய்டும் அதனால் வருது :-)


சதிஷ் ராகுல்
உங்களின் status படிப்பதால்


அந்தோணிராஜ் -பகிர்வு 
உடல் ஆரோக்கியம் போல தான மன ஆரோக்கியமும் உடலை சரியாக பார்த்து கொள்ளாவிட்டால் வியதிகள் தானே வரும் அது போல தான் மனமும்.ஆனால் கடவுள் பக்தி கொண்டவர்களுக்கு மன நோய் வரும் சாத்தியம் மிக மிக குறைவு நல்லதோ கெட்டதோ அங்கே சரணடைந்தால் இல்லை மன நோய்.


K.R.விஜயன் - பகிர்வு
தேவையில்லாத சுமைகளை மனதில் பராமரித்துக்கொண்டிருப்பதால்........ take it easy policy இருந்தால் ஒரு நோயும் வராது. சிரிங்க.............சிரிங்க................சிரிச்சிக்கிட்டே இருங்க அடுத்தவங்க ஒரு மாதிரி பார்த்து கையில் கல்லை தூக்க ஆரம்பித்தவுடன் நிறுத்திடுங்க.......


ஸ்மிலி பிரபு திருச்சி - பகிர்வு
பெரும்பாலும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இது அமைந்தாலும்., உன்மையில் ஒருவன் தான் விரும்பியதை சிந்திக்க இயலாமல் சில விஷயங்களால் கட்டுப்படுத்தப்படும் பொழுது சுதந்திர தன்மையை இழந்த மனம் முதலில் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாகி இருதியில் மன வியாதியாக உருமாறுகிறது..


 மனிதன் எப்பொழுதும் தான் சுதந்திரமாக இல்லாவிட்டாலும் தன் என்னங்களை சுதந்திரமாக அலைய விட நினைப்பான்.. அதாவது கஷ்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு நல்ல சந்தோஷமான வாழ்வை கற்பனை செய்து கொண்டு நாமும் சந்தோஷமாய் வாழ்வோம் என்று நம்பிக்கையுடன் வாழ்வான். எப்போது இந்த சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அப்போது அவனுக்கு நம்மால் வாழ முடியாது, நம்மால் யாருக்கும் யாதொரு பயனும் இல்லை என்ற அச்சம் தோன்ற ஆரம்பிக்கிறது, இதுவே மன நோயின் முதல் படி !

சங்கரலிங்கம் விநாயகம்
pengalaal perbaalum...


ஸ்டீல்ஸ் குமார்
appaa........ ippavavathu itha ketkanumnu thonuche!!


பின்னம்பாக்கம் நித்யானந்த குருமூர்த்தி - பகிர்வு 
ஒரு மனிதன் ஒரு காரியத்தை பற்றி நினைக்கும்போதே, அது சரியாக வந்தால் நல்லது, இல்லையென்றால் ரொம்ப நல்லது என்ற மனோபாவத்துடனேயே ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஏமாற்றமும் தன்னை பாதிக்காத வகையிலே தன் மன நிலையை வைத்துருந்தால்,மனம் சம்பத்தப்பட்ட எந்த அழுத்தமும் வராது சிஸ்டர்.


கவலை இல்லாம்ல் இருந்தால் வராது..


ஸ்ரீவிஜி சொன்னது
இதை அப்படியே ப்ளாக்கில் போடுவேன்.... உங்களின் பின்னூட்டங்களோடு.




சதிஷ் ராகுல்
நல்லது... அப்படியே white லயும் போடுங்க சதிஷ்  

அசைவம்


ஏய் எறும்பே..
சக்கரைக்கு ஆசைப்பட்டு
சுடுநீரில் வெந்து சாகிறாயா!?..
வெள்ளிக்கிழமையும் அதுவுமா
என்னை கொலைக்காரியாக்கி
அசைவ காப்பி
அருந்தவைத்து விட்டாயே.!

வியாழன், ஜூன் 28, 2012

பால்ய தோழி

அக்கா
அண்டி
அம்மா
மேடம்
மிஸ்
சகோ
தோழி
ப்ரெண்ட்
எங்கோ
விஜி.. என 
யார் அழைத்தாலும்
``ஏய், ஏம் புள்ள வீணா கண்டதையெல்லாம்
நெனச்சு கொளம்பிக்கறவ..?’’
அப்படின்னு சொல்ற ஒரே ஒரு ஆரம்பப் பள்ளி தோழி இருக்கா உங்களுக்கு இன்னமும்!?
நீங்கள் கொடுத்து வைத்தவர்..

புதன், ஜூன் 27, 2012

காப்பி நேரம்


இன்று காலையில் கணவரிடம்  பேசிக்கொண்டிருந்த போது (காப்பி நேரம்)  முட்டாள்தனமான ஒரு விவரத்தை வீர செய்கை போல் என்னிடம் பகிர்ந்தார்.

நண்பரின் மகன் 13வயது, அவனுடைய நண்பர்களோடு சேர்ந்து சிகரெட் புகைக்கும் போது கையும் களவுமாக பிடித்து விலாசு விலாசென்று விலாசி விட்டாராம் நண்பர்... அந்த பையனை எனக்கு நன்கு தெரியும். நல்ல மரியாதையான பையன். தலைக்கு மேல் வளர்ந்த பையனை இப்படியா அடிப்பது.! (கூர்ர்ர்ர்....)

ஏன் இன்னமும் இப்படி செய்கிறார்கள் நம்மவர்கள்?

நானும் தான் என் மகன் அந்த வயதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் போது பார்த்துவிட்டேன். கையும் களவுமாகப்பிடித்து விட்டேன்.

என்ன சொன்னேன் தெரியுமா?

ஐயா, எல்லோருக்கும் இதுபோன்ற ஆசை வரும், அம்மா கூட உன் வயதில், பாட்டி வைத்திருந்த சுருட்டை புகைத்து சுவைத்தேன்.. இருமல் வந்தது.. பிறகு அதைத் தொடவே இல்லை.

எல்லாவற்றையும் பழகிப்பார்க்க ஆசை வரும், தப்பில்லை ஆனால் தொடராதே, உடல் நலக்கேடு. என்றேன். அவ்வளவுதான்.

இன்று கூட அவனின் நண்பர்களுக்கு அந்த பழக்கம் இருக்கின்றதாம் ஆனால் அவனுக்கு இல்லை. இப்போ பதினெட்டு வயது இளஞன் அவன்.

பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, அந்த வயதில் நாம் என்ன செய்தோமென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.!

இவனுங்க உலகத்தில் உல்ல அனைத்து அயோக்கியத்தனத்தையும் செய்வானுங்க.. பிள்ளைகள் அப்படியே பொம்மை மாதிரி வளரனுமாம்..
என்ன நியாயம்!

அடித்தால் இன்னும் மோசமாகும் நிலைமை. வெளியுலகம் சென்றுவிட்டால், சுய ஒழுக்கம்தான் பாதுகாப்பு. அதற்கு பெற்றோர்களின் பங்கு என்ன? நாம் சரியான வழிகாட்டியாக இருந்துள்ளோமா!?

வாய் விட்டு சிரித்தேன்

இன்று நான் படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்த ஒரு எழுத்துப் பதிவு.

``ஏன்ய்யா, உங்கள் எழுத்தாளர்களுக்குள் ஏன் இத்தனை அக்கப்போர். ’’