செவ்வாய், டிசம்பர் 13, 2011

வசம்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு
இன்று காலையில்
நான் பூசிக்கொண்ட ஒரு வாசனைத்திரவியம்
உன்னை என் முன்னே அழைத்து வந்தது
அது உனது வாசமல்ல
எனது வாசம்
நீ என்னுள் வசித்தபோது
நான் நேசித்து சுவாசித்த 
நறுமணம் அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக