புதன், டிசம்பர் 21, 2011

காதல் ஆராய்ச்சி


ஓயாத அழைப்பு
தீராத பேச்சு
மணிக்கணக்கில் மூழ்கி
எதேதோ உளறல்
காதலாம் …..!

நித்தம் சிணுங்கும்
சத்தமில்லாத கைப்பேசி..
எழுத்துகள் கூட
அழிந்து போயின
குவியும் குறுந்தகவல்கள்
காதலாம்....!

கரம் பிடித்து
கைகோர்த்து
கண் நோக்கி
‘அப்பா அம்மா’ விளையாட்டிற்கு
மௌன அழைப்பு
காதலாம்….!

காணும்போதெல்லாம்
கட்டித்தழுவி
இதழோடு இதழ்
பதித்த முத்தம்
காதலாம்….!

கனவில் கூட
பிரிவு கூடாதாம்….
கண்ணீரோடு விடிந்து
காலைப்பொழுது
காதலாம்….!

இதில் எதுவுமே
நமக்குள் நடக்கவில்லை
உன் முகம் பார்த்து
பேசியதில்லை
உன் விரல் கூட என்மீது
பட்டதில்லை…..

எப்படி நீ
எனக்குள் இவ்வளவு ஆழமாய்
நுழைந்து அரியணையிட்டாய் ?
இதற்குப்பெயர் என்ன ??
ஆராய்கிறேன் …
ஆனாலும் இது எனக்கு
பிடித்திருக்கு.!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக