புதன், பிப்ரவரி 01, 2012

ஜீரணம்

தாய் அருந்தியதை
அருந்தி வளர்ந்தோம்

பயிர்கள் பருகிய நீரை
பருகி வளர்ந்திருக்கின்றோம்

பலகாரங்கள் குடித்த எண்ணெய்யையும்
குடித்துக்கொண்டிருக்கிறோம்

தாவரங்கள் ஜீரணிக்காத விஷத்தை
ஜீரணித்துக்கொண்டிருக்கிறோம்

ஜீரணிக்காத மரணத்திற்காக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக