செவ்வாய், மார்ச் 27, 2012

நிஜம்

பிடித்தவரோடு இருக்கும் போது, 
பிடிக்காதவரை நாம் நினைப்பதேயில்லை. 
பிடித்தவர் பகைக்கும் போது
பிடிக்காதவரை பிடிப்புக்குள் கொண்டு வருகிறோம்.
இது மனிதனின் பிடிப்பற்ற நிலையேயானாலும்,
இதுவே பலரின் வாழ்வியல் சூட்சமம்.!
உறவை வெற்றிக்கொள்ள
போடப்படும் இந்த நாடகத்தில்
எனது பங்களிப்பு அறவே இல்லாமல் இருக்க
எனக்காகவே நான் போட்டுக்கொள்ளும் கவசம்..
நிஜமான, மாசுமருவற்ற அன்பு.
ஆமாம் உன் மேல் நான் கொண்ட நேசம்,
நிஜம்..நிஜம்..நிஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக