புதன், ஜூன் 06, 2012

பெண் தான் எல்லாமும்


ஒரு பெண்ணை, எந்த ஆணும் அடிமைப் படுத்தி விட முடியாது. அவளே அப்படி மாறிக்கொள்கிறாள். அது அவளின் சுபாவமாகவே உள்ளது.

உதாரணத்திற்கு; வாழ்நாள் முழுதும் அவள் கஷ்டப்படுகிறாள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். கல்யாணத்திற்கு முன் அவளின் குடும்பத்திற்காக உழைக்கின்றாள். கல்யாணம் செய்த பிறகு குழந்தைகளுக்காகவும் குடும்ப சூழலுக்காகவும் உழைக்கின்றாள். குடும்பம் நல்லபடி இருக்கப் போராடுகின்றாள்.

எனக்கு இந்த பொறுப்பு பிடிக்கவில்லை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள் என்று கணவரிடம் சொன்னால், பார்க்காமல் விட்டுவிடுவாரா. பார்ப்பார்தானே,! ஆனால், பெண்களான நமக்குத்தான் மனசு கேட்காது.

சரி நீங்களே குழந்தைகளுக்கு சமைத்துப்போடுங்கள், வீட்டு வேலைகளைச் செய்யுங்கள் எனக்கென்ன, என்றால், செய்யாமல் இருப்பார்களா! செய்வார்கள் தானே.! நமக்கு மனசு வருமா? அவர்களைச் செய்யவிட்டு வேடிக்கைப் பார்க்க.!?

எல்லாப் பொறுப்புகளையும் சரியான இலக்கு நோக்கி நகர்த்தி, குழந்தைகளும் சொந்தக்காலில் நிற்கும் தருணம் வந்து, அப்பாடா, இனியாவது கொஞ்ச காலம் நமக்காக வாழலாமே, என்றிருக்கும் போது, வயதான அம்மா அல்லது மாமி மாமனார் போன்றோர்களைக் கவனிக்கின்ற பொறுப்புகள் புதிதாக முளைக்கும். அது என்ன குழந்தைகளைப் பராமறிப்பதைப்போல் சுலபமானதா? இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்களைவிட இது கொஞ்சம் கூடுதல் கஷ்டமான வேலை.

நாம் பத்து பிள்ளைகளை சீராட்டி பாலூட்டி வளர்க்கலாம் ஆனால் ஒரே ஒரு முதியவரைப் பார்ப்பதைப் போன்றதொரு கடினமான வேலை இருக்க முடியுமா என்ன!

நாம் சொல்லலாம், முடியாது, பார்க்கமாட்டேன், இனிமேல்தான் நான், எனக்காக வாழப்ப்போகிறேன் என்று, `சரி விடு, நானே பார்த்துக்கொள்கிறேனென்று ஒரு ஆண்மகன் சொன்னால், நமக்கு மனசு வருமா!?

நமக்குத்தான் அந்த கலை கைக்கூடும். அவர்களுக்கு இல்லையே. ஆக இப்படி, நாமே இந்த சுழற்சியிலும் சிக்கலிலும் நமது கருணை சுபாவத்தால் மாட்டிக்கொண்டு அல்லல் படுகின்றோம். இதுவே பெண்களின் இயல்பு.

இது புரியாத சில பெண்ணிய புரட்சியாளர்கள் (ஆண்கள்) பெண்ணுரிமை பற்றி மேடையில் முழங்குகிறார்கள்.  நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

3 கருத்துகள்:

  1. இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ. வருகைக்கும் வாசிப்பிற்கும் வந்தனங்கள்

      நீக்கு