வெள்ளி, ஜூலை 06, 2012

சந்தித்தால்....

காதலிக்கவில்லை

கையெழுத்து அழகாக இல்லை,
சர்வ நிச்சயமாக சொல்லலாம்
அவன் யாரையும் காதலிக்கவில்லை.

%%%%

ஆய்வுக்கூடம்

ஒரு நேர சமையலுக்கு எவ்வளவு ஆய்வு..
இரால் ஆய்ந்தேன்
கீரை ஆய்ந்தேன்
கறிவேப்பில்லை ஆய்ந்தேன்
வெங்காயம் ஆய்ந்தேன்
பூண்டு ஆய்ந்தேன்
சமையல் கூடம்
ஆய்வுக்கூடமே..

%%%%%%

ஜி

உயிர் என்றால் - உயிர்
மெய் என்றால் - உடல்
இரண்டும் சேர்ந்தால்
ஜி..

%%%%%%

வெள்ளை கலாச்சாரம்

மின்சாரத்தடை
மெழுவர்த்தி ஏற்றினேன்
மின்சாரம் வந்தது
மெழுவர்த்தியை ஊதி அணைத்தேன்
பழக்கதோஷத்தில்
கைகளைத்தட்டினாள் குழந்தை.

%%%%%%

சுய நினைவு

கடைக்குப்போனேன்
பொருள் வாங்கினேன்
பர்சை பாக்கெட்டில் வைத்தேன்
பாக்கெட்டில் இருந்து எடுத்து
ஹேன்பெக்கில் வைத்தேன்
இவை எல்லாம் சுய நினைவோடுதான் நிகழ்ந்தது
இருப்பினும் மீண்டும் ஒருமுறை
ஹென்பெக்கில் பர்ஸ் உள்ளதா என 
சரி பார்க்கச்சொல்கிறது மனசு....

%%%%%%

எனக்குமானவன்

உனக்குள் வைக்கப்பட்ட திறமைகள்
நான் தலையசைத்து 
ரசிப்பதற்காகவே..

%%%%%

அழியும் சேகரிப்புகள்

நமது சேகரிப்பை,
நமது யூகத்தை,
நமது பின்பற்றலை,
நமது தேடலை,
நமது நியாயங்களை,
நமது கூர்மையை,
நமது கணிப்பை ,
நமது பார்வையை,
நமது திறமையை,
நமது சிறப்புகளை
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் 
யாரோ ஒருவர்
சர்வசாதணரமாக
உடைத்துக்கொண்டே இருக்கின்றார்..
ஆதாரத்தோடு.!

%%%%%%%

தமிழ்தான்

என் உழைப்பில்,
நான் சம்பாதித்த பணத்தை,
அவர் கொடுக்கச் சொன்னார்
என்றால்தான்
வாங்கிக் கொள்கிறார்
அம்மா. 

%%%%%%%

பட்டு

உள் சொட்டுகள் கூட
பட்டுவிடுகின்றன
வெயில் வெளியேதான் அடிக்கிறது.!?

%%%%%

நோய் தன்மை

தன்னாலே சரியாகிப் போகிற
வியாதிகளுக்குத்தான்
நாம் மருந்து எடுத்துக்கொண்டிருக்கின்றோம் -
தினமும்.

%%%%%%


உன்
விழியும்
என்
`வாலும்’
சந்தித்தால்?

%%%%%%






11 கருத்துகள்:

  1. சிறப்பான தலைப்புகளில் அழகாகக்கவி வடித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள் சொந்தமே...!
    ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..!!!!

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ரசனையைத் தருகிறது.......

    பதிலளிநீக்கு
  3. சாதரண மனிதர்கள் எல்லோரும் மன நோயாளிகளே என்பதற்கு இதுதான் ஆதாரம்.............

    /////////////ஹென்பெக்கில் பர்ஸ் உள்ளதா என
    சரி பார்க்கச்சொல்கிறது மனசு..../////////

    பதிலளிநீக்கு
  4. சர்வசாதணரமாக
    உடைத்துக்கொண்டே இருக்கின்றார்..
    ஆதாரத்தோடு.!
    ///////////

    உண்மை...:)

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  6. வர வர தங்களின் கவிதை மேலும் மேலும் மெருகேறுகிறது

    பதிலளிநீக்கு
  7. காதலிக்கவில்லை, ஆய்வுக்கூடம், வெள்ளை கலாச்சாரம் செம கலக்கலான நல்ல பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கு கவிதேவதை என்றொரு பட்டம் மனப்பூர்வமாக வழங்குகிறேன். (ஒவ்வொரு பட்டமாக யோசிச்சு பார்த்தா யாருக்காவது கொடுத்திருக்காங்க... இதுவும் யாருக்கும் கொடுத்திருக்காங்களான்னு தெரியலை.இருந்தாலும் இது உங்களுக்குத்தான்)

    பதிலளிநீக்கு
  9. நடத்துங்க சகோ வர வர பின்றீங்க...கவிதைகள் ஒவ்வொன்னும் அனுபவத்தில் நடைமுறையில்....

    பதிலளிநீக்கு
  10. நல்ல கவிதைகள்.யதார்த்தம் நிறைந்து சொல்லிச்செல்கிற வரிகள் மனதைதொடுகின்றன.வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு