திங்கள், ஜூலை 02, 2012

எப்போதாவது

நீருக்குள் நான் இட்ட செடி
புதிதாக ஒரு வேர் விட்ட போது.

பிடித்தவர்களின் அழைப்பு
வரும் போது..

நல்ல கவிதை வரிகள்
மனதைத் தொடும் போது..

எனக்குப் பிடித்த பாடல்
வானொலியில் ஒலிக்கும் போது..

ஒரு பூ
என்னைப் பார்த்து
கண் சிமிட்டும் போது

தொலைக்காட்சியில் இருவர்
ஆரத்தழுவி முகம் புதைக்கும் போது

காலைவேளையில்
குருவிகள் பேசும்போது

உனது
குட் மார்னிங் வரும் போது

இதில் எதாவதொன்று
தினமும் நிகழும் போது

நான் உன்னை நினைப்பேன்
எப்போதாவது..




4 கருத்துகள்: