புதன், பிப்ரவரி 06, 2013

மாமி கதை (கண்ணு தெரியல)

`கண்ணு தெரியமாட்டேங்கிறது’ ம்ம்மா’

`அதான் கண்ணாடி புல்லி அனுப்பிடுச்சு இல்லே.. போட்டுக்கவேண்டியதுதானே..!’

`அத போட்டாலும் தெரியமாட்டேங்கிறது..’

`அதுக்கு, நான் என்ன செய்ய.. ?’

`ஆஸ்பித்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போம்மா.. செஃக் பண்ணீட்டு, கண்ணு உரிப்பாங்க..’

`ம்ம்..சரி சரி.. சீனப்பெருநாள் லாங் லீவு வருதில்லே, அப்போ பார்க்கலாம்..ஹ்ம்ம்’

`ஹ்ம்ம்.. ’

டீவி பார்க்கிறார்...பழைய பாடல்கள் ஓடுகின்றன..

`அது யாரு சில்க்’ஆ..? முத்துராமன் மகன் அப்படியே இருக்கான்(ர்).. ! பிகராஷ் அப்பா.. பேரு என்னாம்ம்மா...?

`ம்ம்..தியாகராஜன்..’

`ஓ.. சேகரும் இருக்கான்(ர்) ..’

`ம்ம்ம்ம்... கண்ணுதான் நல்லா தெரியுதே..!!’

`ஆஸ்பித்திரிக்கு போனாத்தான், இன்னும் நல்லா தெரியும்..!’

`எது? சினிமா நடிக நடிகர்களையா? ஹிஹி’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக