திங்கள், செப்டம்பர் 02, 2013

மக்கள் ஓசை பத்திரிகைக்கு ஒரு கேள்வி..

போகிறபோக்கில் கதை கட்டுரை எழுதிவிடலாம் ஆனால் எதிர்வினை ஆற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதனை இன்று மக்கள் ஓசையில் வெளிவந்த முனைவர் ஐயா ரெ.கார்த்திகேசு தொடுத்திருந்த எதிவிர்வினையில் கண்டுகொண்டேன். அதிர்ந்தும் போனேன். 

ஐயா, நீங்கள் ஒரு பேராசிரியர் மற்றும் மலேசிய இலக்கிய ஜாம்பவான் . இப்படியா - குளறுபடியான ஒரு எதிர்வினையைக் கொடுப்பீர்கள்..? சராசரி வாசகர்களோடு நீங்களுமா? 

தனிநபர் தாக்குதல் இல்லாமல் பொதுவான கருத்தாக வந்திருக்கவேண்டிய ஒரு எதிர்வினையில் வரிக்கு வரி பதிலடி என்கிற பெயரில் தனிப்பட்ட ஒருவரின் பெயரை இணைத்திருப்பது, வாசிப்பவர்களை சோர்வில் ஆழ்த்துகிறது.

உங்கள் தரப்பு நியாயங்களை யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அழகாகக் கோர்த்திருக்கலாமே, சம்பந்தப்பட்டவர் என்கிற முறையில் அதில் உங்களுக்கு முழு உரிமையும் பங்கும் உண்டு என்கிறபோது.!

இறுதியாக டாக்டர் சண்முகசிவா ஏன் வந்தார், இந்த கருத்துமோதலில்? எல்லாக்கதவுகளையும் மூடிவிட்டு, ம.த.எ.சங்கத்தைத் துதிபாடும் கடிதங்களாக வந்துகொண்டிருக்கிறனவே - இரண்டுவாரங்களாக.. என்னாச்சு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக