கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
Strong people don't put others down. They lift them up." Michael P. Watson
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
செவ்வாய், பிப்ரவரி 28, 2012
கடத்தல்
மலம் கூட
உட்கொள்ளப்படுகிறது
போதை மாத்திரையாக
வெளிவரும் போது
ஏற்றுக்கொள்ளல்
என்னை நீ
எனக்காகவே
ஏற்றுக்கொள்ளும்போது
நான்
நானாகவே
பரிணமிக்கிறேன்
ஞாயிறு, பிப்ரவரி 26, 2012
அறிவிப்பு பலகை
என் வீட்டிற்குள் வர
அழைப்பு மணியை அழுத்தவும்
நாய்கள் ஜாக்ரதை என்கிற
அறிவிப்புப் பலகை இல்லை
கவசம்
நீ என்னைப் பின் தொடரும் தருணங்களில்,
உன்னால் பொறுக்கப் படும் கற்களை
நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
நமது இடவெளி நீளும் போது,
நீ எறிகிற கற்களால்
எனக்குச் சேதம் வராமல்
என்னை நான் தற்காத்துக் கொள்ள
கவசம் தேடிக் கொள்கிறேன்..
புன்னகையில்...
நித்தமும்
எச்சரிக்கையாக
இருக்கும் போது தான்
ஒன்னை நினைத்து
உன்னை எழுதுகிறேன்.
.
வியாழன், பிப்ரவரி 23, 2012
பழகத்தெரியும்
மொக்கை கூட சுவாரஸ்யம்தான்
எழுதத் தெரிந்தவனுக்கு
புல் கூட அழகுதான்
நடத்தெரிந்தவனுக்கு
நான் கூட தேவதைதான்
பார்க்கத்தெரிந்தவனுக்கு
நீ கூட நண்பன்தான்
பழகத்தெரிந்த எனக்கு
தொடரும்
எச்சரிக்கை
இந்த
உணர்வுகள்
தொடராது என்பதால்
வார்தைகள்
மிக கவனமாக
கோர்க்கப்படுகின்றன
எச்சரிக்கை மனம்
சதா எச்சரி
த்துக்
கொண்டே
..
பதில்கள்
யார் அறிவாளியாக
இருந்தால் என்ன!?
நான் முட்டாளாய்
உங்களை விட
மகிழ்ச்சியாய் இருக்கிறேன்..
கேள்விகள் கேட்கப்படும் போது
வெட்டி அரட்டைகள்
ஆரம்பமாகின்றன பதில்களோடு..
பைத்தியக்கார..
எல்லா பைத்தியக்கார
செய்கைகளின்
பின்னால்
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)